சாதிச்சுட்ட மாறா.. 600 மின்னஞ்சல், 80 கால்கள்.. விடா முயற்சியால் உலக வங்கியில் பணி.. அசத்திய இளைஞர்
டெல்லி: ஒரு இளைஞர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வேலைவாய்ப்புக்காக 600 மின்னஞ்சல், 80 கால்கள் என தனது தொடர் விடா முயற்சியால் இந்திய இளைஞர் ஒருவர் உலக வங்கியில் பணிக்கு சேர்ந்து அசத்தியுள்ளார்.
கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகாது, வெற்றிக்கு வேறு குறுக்கு வழிகள் கிடையாது என்ற சொல்லாடல் உண்டு.
இதை மெய்பிக்கும் வகையில்தான் வத்சல் நகதா என்ற இளைஞரின் வேலை தேடும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

எப்படி சாதிக்க முடிந்தது
600 மின்னஞ்சல்கள் மற்றும் 80 தொலைபேசிகள் என வேலைக்காக பெரும் போராட்டம் நடத்திய வத்சல் நகதா, இறுதியில் உலக வங்கியில் வேலை பெற்று அசத்தியுள்ளார். வேலை தேடி, தான் பட்ட கஷ்டங்களையும் இறுதியில் தனது விடா முயற்சி மூலம் எப்படி சாதிக்க முடிந்தது என்பது குறித்தும் லிங்க்ட் இன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

யேல் பல்கலைக்கழகத்தில்
கொரோனா உச்சம் தொட்டு இருந்த 2020 ஆம் ஆண்டுதான் யாலே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நான் எனது பட்டப்படிப்பை நிறைவு செய்தேன். அந்த சமயத்தில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தன. ஏனென்றால், மோசமான நாட்கள் வரும் என அச்சத்தில் அதை எதிர்கொள்ள இந்த நிறுவனங்கள் தயாராகி கொண்டு இருந்தன. எனக்கு வேலையும் இல்லை. இரண்டு மாதங்களில் நான் பட்டத்தையும் நிறைவு செய்ய இருந்தேன்.

வேலை இல்லாமல் இந்தியா திரும்பக்கூடாது
யேல் பல்கலைக்கழக்த்தில் தான் மாணவராக இருந்தேன். இங்கு ஒரு வேலையை பெற முடியாவிட்டால் யேல் பல்கலைக்கழகம் வந்ததில் என்ன பயன் என்று நான் நினைத்தேன். எனது பெற்றோரிடம் பேசுவதற்கு கூட சங்கடமாக உணர்ந்தேன். வேலை இல்லாமல் இந்தியாவுக்கு திரும்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனது முதல் சம்பளம் டாலரில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களை அளிக்கும் நிறுவனங்களில் பதிவு செய்வதை முற்றிலுமாக தவிர்த்தேன்.

600 க்கும் மேலான மின்னஞ்சல்கள்
இரண்டு மாதங்களில் 1,500-க்கும் மேற்பட்ட கனெக்ஷன் ரெக்யூஸ்ட்களை கொடுத்தேன். 600 க்கும் மேலான மின்னஞ்சல்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட முறை போன் செய்து வேலை வாய்ப்பு பற்றி விசாரித்தேன். இறுதியில் இது எனக்கு கை கொடுத்தது. மே மாதம் முதல் வாரத்தில் 4 வேலை வாய்ப்புகள் வந்தது. அதில் உலக வங்கி பணியை நான் தேர்வு செய்தேன். எனது கதையை பகிர்வதன் நோக்கமே, யாரும் ஒருபோதும் முயற்சியை கைவிட்டு விடக்கூடாது என்பதே ஆகும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் நல்ல நாட்கள் நிச்சயம் வரும்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications