சிக்கிய 87 கட்சிகள்.. லிஸ்ட்டில் இருந்து நீக்கம்.. தேர்தல் கமிஷன் அதிரடி.. காரணம் என்ன தெரியுமா?
தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து, 87 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன
டெல்லி: தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து, செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது... வரிக்கணக்கு தாக்கல் செய்யாதது, முகவரியை புதுப்பிக்காதது என, இப்படி காணாமல் போன, 87 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறை.. கடந்த வருடம் செப்டம்பர் மாத நிலவரப்படி, 2,796 பதிவு செய்யப்பட்ட, அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த, 2001ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 300 சதவீத உயர்வாகும்.. ஆனால், வெறும் பெயரளவுக்கு கட்சியை ஆரம்பித்துவிட்டு, வருமான வரிச்சலுகை உள்ளிட்ட சலுகைகளை சிலர் பெற்று வந்தனர்.

87 கட்சிகள்
அதுமட்டுமல்ல, தங்களின் கட்சியின் பெயரை காட்டி, சில மோசடிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.. அதனால்தான், தேர்தல் கமிஷன் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.. அதன்படி, தேர்தல்களில் போட்டியிடாத, மற்றும் முறையாக கணக்குகள் தாக்கல் செய்யாத கட்சிகளின் பெயர்களை நீக்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.. இதனால், அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்த பல கட்சிகள் வெலவெலத்து போய்விட்டன..

அறிவிப்பு
தேர்தல் கமிஷன் சொன்னபடியே, ஆய்வுகளை மேற்கொண்டது.. அதன்படி, நாடு முழுதும் உள்ள, 2,100 பதிவு செய்யப்பட்ட, அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் குறித்து ஆய்வுகளை தொடங்கியது.. அப்போதுதான், 87 கட்சிகள் சிக்கின.. இவைகள் முறையாக செயல்படாதவை.. காணாமல் போனவை.. அதனால்தான், அவைகளின் பெயர்களை நீக்கியது தேர்தல் கமிஷன்.. மாநில தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, ஏற்கனவே குறிப்பிட்டிருந்த முகவரியில் இந்தக் கட்சிகள் இயங்காதது கண்டுபிடிக்கப்பட்டது...

தேர்தல் சின்னம்
அதுமட்டுமல்ல, நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தன. அதற்கு பிறகு உரிய விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரிகள், செயல்பாட்டில் இல்லாத இந்த 87 கட்சிகளையும் கண்டுபிடித்து, நீக்கினார்கள்.. இந்த கட்சிகள் உடனடியாக விதிமுறைகளை சரி செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தலில் சின்னம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறுகின்றன..

சின்னங்கள்
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "இந்த நடவடிக்கைக்கு உள்ளான அரசியல் கட்சிகள், பரிகாரம் கோரி உரிய ஆதாரங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரிகளை அணுகலாம்.. அவ்வாறு தவறை திருத்தி கொள்ளும் நடவடிக்கையை 87 அரசியல் கட்சிகளும் எடுக்கவில்லை என்றால், தேர்தலின்போது பொதுச்சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கீடு சட்டம் 1968-ன் கீழ் பலன்களை அனுபவிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications