நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள்?.. மணமகனிடம் விளையாட்டாக கேட்டு பல்பு வாங்கிய மணப்பெண்
டெல்லி: திருமண மண்டபத்தில் மணப்பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவரே அசந்து போகும் அளவுக்கு மணமகன் பதில் அளித்துள்ள நிலையில் ஆண்கள் எல்லாம் காலரை தூக்கிவிட்டு சபாஷ் போட்டு வருகிறார்கள்.
அண்மைக்காலமாக கல்யாண வீடுகளில் பல்வேறு காமெடி களேபரங்கள் நடந்து வருவதை நாம் பார்க்கிறோம். ஒரு திருமணத்தில் கண்ணாடி அணிந்திருந்த மணமகனிடம் சில எழுத்துகளை படிக்கச் சொன்ன போதுதான் அந்த நபருக்கு கண் பார்வை சற்று மங்கலாக தெரியும் என்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்து அந்த திருமணம் நின்று போனது.
அது போல் ஒரு திருமணத்தில் மாப்பிள்ளையின் தாய்மாமா குட்கா போட்டுக் கொண்டு சம்பிரதாயங்களை செய்தார். அப்போது அந்த மணப்பெண் பளார் என அறைந்து குட்காவை துப்பி வருமாறு கூறினார். ஆனால் அந்த தாய்மாமாவோ "நான் மட்டுமா குட்கா போட்டேன், மாப்பிள்ளை வாயை பாருங்கள்" என போட்டுக் கொடுத்துவிட்டார்.

மாப்பிள்ளை
உடனே மணமகளின் பார்வை மாப்பிள்ளையின் மீது திரும்பியது. அந்த பெண் வாயை காட்டுமாறு கூற, மாப்பிள்ளை தனது தாய்மாமாவுக்கு அடித்த அடியை பார்த்துவிட்டு ஒன்றுமில்லை என பதில் சொல்ல ஓங்கி ஒரு அறைவிட்டதில் அவரும் போய் குட்காவை துப்பிவிட்டு வந்தார்.

மாப்பிள்ளை அழைப்பு
இன்று ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பின் போது இரவு குடித்துவிட்டு போதை தலைக்கேறி காலை முகூர்த்த நேரத்தில் வரவில்லை. இதையடுத்து மணமகன் அறைக்கு போய் சென்று பார்த்தால் அவர் போதையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் தனக்கு இந்த குடிகார மாப்பிள்ளை வேண்டாம் என கூறிய அந்த பெண் திருமணத்தையே நிறுத்திவிட்டார்.

மணப்பெண்
தற்போது நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணும் மணமகனும் நண்பர்களை போல நடந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் எந்தவித டென்ஷனும் இல்லாமல் இருக்கிறார்கள். திருமணத்தின் போது மணமக்கள் அடிக்கும் லூட்டிகளை வீடியோ கிராபர்கள் பதிவு செய்து அதை சோஷியல் மீடியாக்களில் பதிவிடுகிறார்கள்.

ஏன் திருமணம்
அந்த வகையில் மணப்பெண் ஒருவர் மணமகனிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என கேட்டார். அதற்கு மணமகன் யோசித்து மணப்பெண்ணே மிரளும் அளவுக்கு ஒரு பதிலை சொல்கிறார். இதற்கு விளையாட்டாக அந்த மணமகன் "நான் நிம்மதியாக இருக்க விரும்பவில்லை. அதனால் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று ஒரே போடு போட்டார். மணப்பெண் கப்சிப் ஆகிவிட்டார். அங்கு சுற்றியிருந்தவர்களும் சிரித்தனர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications