ஆதார் கார்டு இருக்குல்ல? இனி மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்! சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: தமிழகத்தில், மின் நுகர்வோர் எண்ணுடன் , ஆதார் எண்ணையும் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.. இதுகுறித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சொல்லி உள்ளதென்ன?
தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகிறது.. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இதை உத்தரவை எதிர்த்து, எம்எல் ரவி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.. ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
சென்னை ஹைகோர்ட்
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை ஹைகோர்ட்டிலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்படி மனுதாரரை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.. இதையடுத்து, மனுதாரரும், மறுஆய்வு மனுவை சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார்.. ஆனால், அந்த மனுவையும் ஹைகோர்ட் ரத்து செய்துவிட்டது.
மீண்டும் தள்ளுபடி செய்த நீதிபதிகள்
இதற்கு எதிராக எம்எல் ரவி, சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் எங்களது தரப்பு கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த மனு, நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மின் நுகர்வோர் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை, மாநில அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ளது. அது மாநில அரசின் கொள்கை சார்ந்த விஷயம்.. இதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.
ஆதாரை இணைப்பது பாதுகாப்புதான்
கடந்த 2023 ம் ஆண்டும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த வழக்கை அப்போது விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜோசப் மற்றும் நாகரத்னா சொல்லும்போது, "தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்புதான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications