டெல்லி மதுபான கொள்கை முறைகேடு என்பது சதி திட்டம்.. தீட்டியது பாஜகதான்! சஞ்சய் சிங் எம்பி புகார்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்த ஆம் ஆத்மியின் நாடாளுமன்ற குழு தலைவர் சஞ்சய் சிங் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், இந்த வழக்கு ஒரு சதி திட்டம் என்றும், இது பாஜகவால்தான் தீட்டப்பட்டது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், "டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட மகுந்தா ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது. இந்த விசாரணையின்போது கடந்த பிப்ரவரி 10 முதல் ஜூலை 16 வரை ராகவ் மகுந்தாவிடமிருந்து 7 வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. இதில் 6ல் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை சொல்லவில்லை. ஆனால் கடைசியாக ஜூலை 16ம் தேதி வழங்கிய வாக்குமூலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

காரணம் சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட சித்தரவதைதான். அதேபோல, மகுந்தா ரெட்டியின் மகன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர்தான் அவர் தனது வாக்குமூலத்தை மாற்றியிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க பெரிய சதி நடந்துள்ளது. மதுபான ஊழலுக்கு பாஜக தான் காரணம். கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் விமர்சித்துள்ளார்.
இவரது பேட்டி பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. முன்னதாக இவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் முக்கியமானது, டெல்லி மதுபான வழக்கு குறித்து பொதுவெளியில் எதுவும் பேசக்கூடாது என்றும், செய்தி ஊடகங்களுக்கு இது குறித்து பேட்டி அளிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்காகும். ஆனால் இதனை மீறி சஞ்சய் சிங் இன்று பேட்டியளித்திருக்கிறார்.
பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
ஜெக்ரிவாலின் நீதிமன்ற காவல் கடந்த 1ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 2ம் எண் சிறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 19ம் தேதி நாடு முழுவதும் 22 மாநிலங்களில் முதற்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போது கெஜ்ரிவாலுக்கு காவரை நீட்டித்து வழங்கப்பட்டுள்ள உத்தரவு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications