என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம்- பெரும்பான்மையினருக்கு பாதிப்பு என குற்றச்சாட்டு
என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம்- பெரும்பான்மையினருக்கு பாதிப்பு என குற்றச்சாட்டு
டெல்லி: மத்திய அரசின் குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசும் என்பிஆர் குறித்து சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இதற்கு பதில் கிடைக்காத வரை என்.பி.ஆரை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் டெல்லி சட்டசபையிலும் என்பிஆருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டசபையில் மாநில அமைச்சர் கோபால் ராய் இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அப்போது, என்.பி.ஆரால் பெரும்பான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கோபால் ராய் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications