ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் விசாரணை நிறைவு! அதானி குழுமத்தின் மீது எந்தவொரு தவறும் இல்லை! செபி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் பங்கு முறைகேடு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருந்த நிலையில், இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி (SEBI) அதை நிராகரித்துள்ளது. அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் போன்ற நிறுவனங்களின் மீது தவறில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் ஒரு பகுதியான அட்கார்ப் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் (Adicorp Enterprises Pvt. Ltd.) நிறுவனம், பல்வேறு அதானி நிறுவனங்களிடமிருந்து அதானி பவருக்கு நிதியைத் திருப்பிவிடப் பயன்படுத்தப்பட்டதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் சில மாதங்களுக்கு முன்பு அறிக்கையை வெளியிட்டது. இந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்பது பிரபலமான ஷார்ட்-செல்லிங் நிறுவனமாகும்.

adani India

2020ஆம் ஆண்டில் நான்கு அதானி குழும நிறுவனங்கள் அட்கார்ப் (Adicorp) மூலம் அதானி பவருக்கு மொத்தம் ₹6.2 பில்லியன் (சுமார் $87.4 மில்லியன்) கடன் வழங்கின. இந்த நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக இருக்கும் சூழலில் கடன் குறித்த விவரங்கள் அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளில் இடம்பெறவில்லை என்றே ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

அட்கார்ப் இந்த நிதியை வைத்து அதானி பவருக்கு ₹6.1 பில்லியன் (சுமார் $86 மில்லியன்) கடனாக வழங்கியதாக ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியிருந்தது. இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துச் செபி விசாரணை நடத்தியது. அதில் அட்கார்ப் தொடர்பான பரிவர்த்தனைகளிலும், அதானி பவருக்கான கடன்களிலும் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என்பதைச் செபி கண்டறிந்துள்ளது. இதன் மூலம், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து செபி விரிவான விசாரணையை நடத்தியது. இந்தப் பரிவர்த்தனைகள் செபியின் LODR விதிகளை மீறுகின்றனவா அல்லது செபி சட்டத்தின் கீழ் தவறான நிதி அறிக்கையாக இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.

விசாரணையில், இந்தக் குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் ஒரே நிறுவனத்திற்குள்ளான பரிவர்த்தனை என்ற வரையறைக்குள் வரவில்லை என்றும், எந்தவொரு விதிமீறல் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் செபி முடிவு செய்தது. எனவே, அதானி குழும நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

தங்கள் நிதி நடைமுறைகள் வெளிப்படையானவை என்றும், அனைத்துச் சட்ட மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் பின்பற்றுகிறோம் என்றே அதானி குழுமம் தொடர்ந்து கூறி வந்தது. மேலும், தங்கள் நிறுவனங்கள் எந்தவொரு விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் தொடர்ந்து மறுத்து வந்தது.

செபியின் இந்த முடிவு, அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. பங்குச் சந்தை ஆபரேஷனை பாதிக்கும் வகையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகச் சொல்லி சில குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்த ஹிண்டன்பர்க் முயன்றாலும், செபியின் கண்டுபிடிப்புகள் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்கிறது. மேலும், அவர்களின் பரிவர்த்தனைகளின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்தின.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு பல மாதங்களாக நீடித்த நீடித்த குழப்பத்திற்குச் செபி விசாரணை அறிக்கை ஒரு தெளிவைக் கொடுக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+