விகாஸ் துபே கொல்லப்படலாம்.. அப்பவே சந்தேகப்பட்ட வக்கீல்.. செய்து காட்டிய உ.பி.போலீஸ்!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பிரபல தாதா போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படலாம் என்று வியாழக்கிழமை மாலையே வழக்கறிஞர் கன்ஷியாம் உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை மத்தியப்பிரதேசத்தில் இருந்து கான்பூர் அழைத்து வரும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் விகாஸ் துபேவை சுட்டுக் கொன்றதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்து இருந்த வழக்கறிஞர் கன்ஷியாம் உபத்யாய் தனது மனுவில், ''உத்தரப்பிரதேச போலீசாரால் எவ்வாறு விகாஸ் துபேவின் ஆட்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனரோ அதேபோல், விகாஸ் துபேவும் கொல்லப்படலாம்.

எவ்வாறு கூட்டாளிகள் கொல்லப்பட்டனரோ அதேபோல் விகாஸும் கொல்லப்படலாம். நான் இவ்வாறு கூறுவதால், விகாஸ் துபே மீது எனக்கு பரிதாபம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த நாட்டில் அப்சல் குரு, அஜ்மல் கசாப் இருவரின் வழக்குகள் கூட முறையாக நடத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச போலீசார் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டு அவர்களே முன் வந்து விகாஸ் துபேவை என்கவுன்டரில் கொன்றுவிட முடியாது. உபி போலீசாருக்கு அசுரன் போன்றவர் விகாஸ் துபே.
விகாஸ் துபே மீது இதுவரை 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒன்றில் கூட போலீசார் நேர்மையாக செயல்பட்டு தண்டனை வாங்கித்தராத காரணத்தினால், இதுவரையும் விகாஸ் துபே வெளியே சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருந்தார். அரசியல்வாதிகள், போலீசாருடன் விகாஸ் துபேவுக்கு இருக்கும் தொடர்பை நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும். சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் உபி போலீசார் எந்த முடிவையும் எடுக்காத வகையில் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசாரின் பிடியில் இருந்து விகாஸ் துபே தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக் கொன்றதாக உபி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications