விகாஸ் துபே கொல்லப்படலாம்.. அப்பவே சந்தேகப்பட்ட வக்கீல்.. செய்து காட்டிய உ.பி.போலீஸ்!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பிரபல தாதா போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படலாம் என்று வியாழக்கிழமை மாலையே வழக்கறிஞர் கன்ஷியாம் உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை மத்தியப்பிரதேசத்தில் இருந்து கான்பூர் அழைத்து வரும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் விகாஸ் துபேவை சுட்டுக் கொன்றதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்து இருந்த வழக்கறிஞர் கன்ஷியாம் உபத்யாய் தனது மனுவில், ''உத்தரப்பிரதேச போலீசாரால் எவ்வாறு விகாஸ் துபேவின் ஆட்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனரோ அதேபோல், விகாஸ் துபேவும் கொல்லப்படலாம்.

எவ்வாறு கூட்டாளிகள் கொல்லப்பட்டனரோ அதேபோல் விகாஸும் கொல்லப்படலாம். நான் இவ்வாறு கூறுவதால், விகாஸ் துபே மீது எனக்கு பரிதாபம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த நாட்டில் அப்சல் குரு, அஜ்மல் கசாப் இருவரின் வழக்குகள் கூட முறையாக நடத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச போலீசார் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டு அவர்களே முன் வந்து விகாஸ் துபேவை என்கவுன்டரில் கொன்றுவிட முடியாது. உபி போலீசாருக்கு அசுரன் போன்றவர் விகாஸ் துபே.
விகாஸ் துபே மீது இதுவரை 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒன்றில் கூட போலீசார் நேர்மையாக செயல்பட்டு தண்டனை வாங்கித்தராத காரணத்தினால், இதுவரையும் விகாஸ் துபே வெளியே சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருந்தார். அரசியல்வாதிகள், போலீசாருடன் விகாஸ் துபேவுக்கு இருக்கும் தொடர்பை நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும். சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் உபி போலீசார் எந்த முடிவையும் எடுக்காத வகையில் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசாரின் பிடியில் இருந்து விகாஸ் துபே தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக் கொன்றதாக உபி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications