கொரோனா அச்சம்: டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன்- பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் டெல்லியை விட்டு வெளியேறி வருகின்றன்றனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 23,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை இருப்பதாக ஏற்கனவே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த 1 வாரம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் ஏப்ரல் 26-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் டெல்லியில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் திரண்டிருந்தனர்.
லாக்டவுன் தொடர்ந்து அமலில் இருக்குமா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications