எங்களுக்கும் "லீகல் பாதுகாப்பு" தேவை.. பைசர், மாடர்னாவை தொடர்ந்து.. மத்திய அரசிடம் கேட்கும் சீரம்!
டெல்லி: பைசர், மாடர்னா நிறுவனங்களை தொடர்ந்து தங்களுக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வேக்சின்களை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. ஆனால் கடந்த டிசம்பரிலேயே வேக்சின் விற்க முன்வந்த பைசர் நிறுவனத்திடம், இந்தியாவிலும் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்தது.
இந்தியாவில் வேக்சின் சோதனை செய்தால் மட்டுமே அனுமதி தருவோம் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்த காரணத்தால் பைசர் வேக்சின் இந்தியாவில் விற்கும் முடிவை கைவிட்டது. இந்த நிலையில் தற்போது வேக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளது.

சலுகை
அதன்படி மாடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்களின் வேக்சினுக்கு லீகல் பாதுகாப்பு கொடுக்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது. அதோடு உலக சுகாதார மையத்தால் அனுமதிக்கப்பட்ட கொரோனா வேக்சின்களுக்கு இந்தியாவில் டெஸ்ட் செய்யாமலே அனுமதி வழங்கவும் முடிவிலும் மத்திய அரசு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மாடர்னா, பைசர் நிறுவனங்களுக்கு இந்தியாவில் கதவை திறந்து விடும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு
லீகல் பாதுகாப்பு என்பது பெரும்பாலான வேக்சின் நிறுவனங்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை ஆகும். இதை indemnity பாதுகாப்பு என்று அழைப்பார்கள். இந்த பாதுகாப்பை பெறுவதன் மூலம், வேக்சின்களை எடுத்துக்கொள்ளும் நபர்கள் யாரும், அதனால் பக்க விளைவு ஏற்பட்டால், வேக்சின் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது. உதாரணமாக பைசர் நிறுவனத்திற்கு லீகல் பாதுகாப்பு இருந்தால், அந்த வேக்சினை எடுக்கும் யாரும், அந்த நிறுவனத்திற்கு எதிராக கேஸ் போட முடியாது.
Recommended Video

அரசு ஈர்க்கும்
இந்த நிறுவனங்களின் வேக்சினுக்கான சட்ட ரீதியான பொறுப்புகளை அரசே ஏற்கும். இந்தியாவில் வேக்சின்களை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதால் இந்த சலுகையை வழங்கும் திட்டத்தில் இந்தியா இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இதே சட்ட ரீதியான பாதுகாப்பை எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஆஸ்ட்ரா செனகாவின் கோவிட்ஷீல்ட் வேக்சினை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தகவல்
மாடர்னா, பைசர் நிருவனங்களுக்கு லீகல் பாதுகாப்பு வழங்கினால் எங்களுக்கும் வழங்க வேண்டும், ஏன் எல்லா வேக்சின் நிறுவனங்களுக்கும் லீகல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் மத்திய அரசு இன்னும் அதிகாரபூர்வமாக யாருக்கும் லீகல் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications