தனிமைப்படுத்திக் கொண்ட...மத்திய அரசு தலைமை வழக்கறிஞர்...கேகே வேணுகோபால்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தன்னுடன் பணியாற்றும் வழக்கறிஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, தீர்ப்பாயத்தில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்த வழக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைக்குமாறு வேணுகோபால் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்வி ராஜூ இதற்கான கோரிக்கையை வைத்து இருந்தார்.

இவரது கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா அடங்கிய பெஞ்ச் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் ஆயுதப்படை தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்புவது தொடர்பான மனுக்கள் மீது நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications