விவசாயம் மசோதா வேறொன்றுமில்லை... விவசாயிகளுக்கான மரண தண்டனை... ராகுல் காந்தி காட்டம்!!
டெல்லி: விவசாயம் தொடர்பான புதிய சட்டங்கள் வேறொன்றுமில்லை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி, ''நமது விவசாயிகளுக்கு விவசாய மசோதா என்பது மரண தண்டனை போன்றது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

ராஜ்ய சபாவில் மூன்று விவசாயிகள் மசோதாவை நிறைவேற்றும்போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்களது இடத்தில் இருந்து வாக்களிப்பதற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதுகுறித்த கோரிக்கைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வைக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், திமுக எம்பி திருச்சி சிவா இதுகுறித்து கோரிக்கை வைத்து இருப்பது ராஜ்ய சபாவில் பதிவாகி இருக்கும் வீடியோ பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்தும் ராகுல் காந்தி குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாய மசோதாவால் எந்தப் பலனும் விவசாயிகளுக்கு ஏற்படப் போவதில்லை. கார்பரேட்களுக்கு சாதகமாக இந்த மசோதா அமைந்து இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
டெல்லியில் நேற்று காலை இந்தியா கேட் முன்பு டிராக்டர்களுக்கு இளைஞர் காங்கிரசார் தீ வைத்தனர். இதற்கு இன்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் மசோதா மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று மத்திய அரசும், மோடியும் தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications