விவசாயிகளை அடிமையாக்கிய விவசாய மசோதா...ராகுல் காந்தி...பிரியங்கா காந்தி விளாசல்!!
டெல்லி: புதிய விவசாய மசோதா நமது விவசாயிகளை அடிமைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டியால் சிறு குறு தொழிற்சாலைகள் நசுக்கப்பட்டு இருக்கும் நிலையில் விவசாயிகள் அழிக்கப்பட்டு வருகின்றனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
விவசாய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம், மனித சங்கிலி, ரயில் மறியல் போராட்டம் என்று நடைபெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களில் இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளில் சாலைகளில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

விவசாய மசோதாவை கடுமையாக எதிர்த்து இருக்கும் காங்கிரஸ் நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தது. துவக்கத்தில் இருந்து இந்த மசோதாவை ராகுல் காந்தி எதிர்த்து வந்தார். கார்பரேட்களுக்கு சாதகமாக விவசாய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச விலை பாதிக்கப்படும் என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் இன்றும் தனது ட்விட்டரில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில், ''ஏற்கனவே ஜிஎஸ்டி சிறுகுறு விவசாயிகளை அழித்துள்ளது. இந்த நிலையில் விவசாய மசோதா விவசாயிகளை அடிமைப்படுத்தியுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ''விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச விலை பறிக்கப்பட்டுள்ளது. கான்ட்ராக்ட் விவசாயம் மூலம் டிரில்லியன் தொழிலதிபர்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுள்ளனர். விலையும் இல்லை, மரியாதையும் என்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தங்களது சொந்த நிலங்களிலேயே விவசாயிகள் இனி தொழிலாளர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாய மசோதா கிழக்கு இந்திய கம்பெனிகள் நம்மை அடிமைப்படுத்தியதை நினைவு கூறுகிறது. இந்த அநீதி விவசாயிகளுக்கு ஏற்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications