விவசாயிகளை அடிமையாக்கிய விவசாய மசோதா...ராகுல் காந்தி...பிரியங்கா காந்தி விளாசல்!!
டெல்லி: புதிய விவசாய மசோதா நமது விவசாயிகளை அடிமைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டியால் சிறு குறு தொழிற்சாலைகள் நசுக்கப்பட்டு இருக்கும் நிலையில் விவசாயிகள் அழிக்கப்பட்டு வருகின்றனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
விவசாய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம், மனித சங்கிலி, ரயில் மறியல் போராட்டம் என்று நடைபெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களில் இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளில் சாலைகளில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

விவசாய மசோதாவை கடுமையாக எதிர்த்து இருக்கும் காங்கிரஸ் நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தது. துவக்கத்தில் இருந்து இந்த மசோதாவை ராகுல் காந்தி எதிர்த்து வந்தார். கார்பரேட்களுக்கு சாதகமாக விவசாய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச விலை பாதிக்கப்படும் என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் இன்றும் தனது ட்விட்டரில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில், ''ஏற்கனவே ஜிஎஸ்டி சிறுகுறு விவசாயிகளை அழித்துள்ளது. இந்த நிலையில் விவசாய மசோதா விவசாயிகளை அடிமைப்படுத்தியுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ''விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச விலை பறிக்கப்பட்டுள்ளது. கான்ட்ராக்ட் விவசாயம் மூலம் டிரில்லியன் தொழிலதிபர்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுள்ளனர். விலையும் இல்லை, மரியாதையும் என்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தங்களது சொந்த நிலங்களிலேயே விவசாயிகள் இனி தொழிலாளர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாய மசோதா கிழக்கு இந்திய கம்பெனிகள் நம்மை அடிமைப்படுத்தியதை நினைவு கூறுகிறது. இந்த அநீதி விவசாயிகளுக்கு ஏற்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications