மாஸ்கோ புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானிக்கு கொரோனா.. நடுவானில் அவசரமாக டெல்லி திரும்பிய விமானம்
டெல்லி: ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஒரு விமானம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளை அழைத்து வர மாஸ்கோ புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இருந்த விமானிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Recommended Video
கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே 16ஆம் தேதி முதல் வந்தே பாரத் திட்டம் மூலம் மீட்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களும் கடற்படையின் கப்பல்களும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஏர் இந்தியா விமானமான ஏ-320 நியோ விமானம் மாஸ்கோவில் உள்ள இந்தியர்களை மீட்க டெல்லியிலிருந்து இன்று புறப்பட்டது.
இந்த நிலையில் அந்த விமானம் உஸ்பெகிஸ்தான் வான்வெளியை அடைந்தது. அப்போது அந்த விமானத்தை இயக்கிய விமானிகளில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது தெரியவந்தது. இதையடுத்து விமானத்தை மீண்டும் டெல்லிக்கே வர விமான கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டது.
அதன்பேரில் விமானம் டெல்லியை மதியம் 12.30 மணிக்கு அடைந்தது. அந்த விமானத்தில் இருந்த விமான குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மாஸ்கோவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேறு விமானம் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏர் இந்திய விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில் அந்த விமானிக்கு ஏற்கெனவே கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என வந்தது. ஏதோ தவறு நடந்திருக்கிறது. அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவுடன் மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் வைரஸ் தொற்று உறுதியானது என்று தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications