ஒரே நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணி நீக்கம்.. என்ன நடக்கிறது.. மத்திய அமைச்சருக்கு ஏஐடியூசி கடிதம்
டெல்லி: லாக்டவுன் காலகட்டத்தை காரணமாக காட்டிக்கொண்டு, பணியாளர்களை வேலையில் இருந்து தனியார் நிறுவனங்கள் பல நீக்கிக் கொண்டிருப்பதை அகில இந்திய வர்த்தக சங்கம் (AITUC) மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.
Recommended Video
குறிப்பாக ஒரு சர்வதேச நிறுவனம் 700 பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியதை குறிப்பிட்டு ஏஐடியூசி கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, ஃபேர் போர்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஊழியர்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக, உங்களின் தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.
தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை இதுதொடர்பாக வழங்கவேண்டும்.
அனைத்து சட்ட திட்டங்களையும் மதிக்காமல் சட்டவிரோதமாக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஏஐடியூசி தெரிவித்துள்ளது.
லாக்டவுன் காலகட்டத்தை சுட்டிக்காட்டி எந்த நிறுவனமும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. அதே போன்று தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை பிடித்தம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. அப்படி இருந்தும் சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு இந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில நிறுவனங்கள், தொழிலாளர்களை நீக்கம் செய்துள்ளன. இந்த நிலையில்தான் ஏஐடியூசியின், இந்த கோரிக்கை முக்கியமாக பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு சென்னை எச்சிஎல் தரும் வேலை.. ஏப்ரல் 6ல் இண்டர்வியூ -
IT Jobs: ரூ.21 லட்சம் வரை சம்பளம்.. அனுபவம் தேவையில்லை.. இன்போசிஸ் பணிக்கு ஏப்ரல் 13 கடைசி நாள் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
நாணயம் அச்சிடும் ஆலையில் வேலை.. 95,000 சம்பளம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அப்ளை பண்ண ரெடியா? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications