அமர்நாத் யாத்திரை; ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்த BSF வீரர்கள்!
டெல்லி: அமர்நாத் யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயணத்தை பிஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பானதாக மாற்றியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடங்கி, பக்தர்களுக்கு மருத்துவ முதலுதவி அளிப்பது வரை வீரர்கள் இரவும் பகலும் பாடுபட்டு வருகிறார்கள்.
அமர்நாத் யாத்திரையின் போது பிஎஸ்எஃப் குழுக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உதவி செய்து வருகின்றன. மருத்துவ உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, அவர்கள் பாதுகாப்பாக இருக்க உறுதியாக செயல்படுகின்றன.

இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய யாத்திரையில், 1.75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புனித குகையை சென்றடைந்துள்ளனர். செங்குத்தான ஏற்றங்கள், குளிர்ந்த வானிலை மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் காரணமாக பக்தர்கள் பலர் சோர்வு மற்றும் சுவாச சிரமங்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு வீரர்கள் உதவி செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவியில் பிஎஸ்எஃப்
பாஹல்காம் மற்றும் பால்தால் பாதைகளில் பிஎஸ்எஃப் குழுக்கள் மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குகின்றன. அவசர நிலைகளை சமாளிக்க பயிற்சி பெற்ற இக்குழுக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், முதலுதவி கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் செயல்படுகின்றன. "ஒவ்வொரு பக்தர்களுக்கும் உதவ நாங்கள் 24/7 தயாராக உள்ளோம்," என்று பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு உடனடி ஆக்ஸிஜன் ஆதரவு வழங்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள்.
சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகள்
புனித பயணத்தின் பாதையை சுத்தமாக வைத்திருக்க பிஎஸ்எஃப் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊரக சுகாதார இயக்குனரகத்துடன் இணைந்து, மொபைல் கழிப்பறைகள் போன்றவற்றை நிறுவி சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. குப்பைகளை உரமாக மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிஎஸ்எஃப்-க்கு பக்தர்களின் பாராட்டு
பக்தர்கள் பிஎஸ்எஃப்-ன் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுனிதா தேவி கூறுகையில், "கடினமான ஏற்றத்தில் கூட அவர்கள் எப்போதும் துணையாக இருந்தனர்," என்றார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜேஷ் மேத்தா, "முன்பு நான் இதுபோன்ற சிறந்த மருத்துவ உதவியை எங்கும் பார்த்ததில்லை," என்று தெரிவித்தார்.
மழையிலும் தொடரும் புனித பயணம்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மழை பெய்தாலும், புனித பயணம் எந்த தடையும் இல்லாமல் நடைபெறுகிறது. பிஎஸ்எஃப் குழுக்களின் அர்ப்பணிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் ஆன்மீக பயணத்தை பாதுகாப்பாக நிறைவு செய்கிறார்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications