போலி என்கவுண்டர் வழக்கு.. பகவத் கீதையை உதாரணம் காட்டி அமித்ஷாவை கண்டித்த ராகுல் காந்தி!
டெல்லி: சொராபுதீன் ஷேக்கை என்கவுண்டர் செய்ய அமித்ஷாவிற்கு ரூ.60 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாக அந்த வழக்கை விசாரித்த தலைமை விசாரணை அதிகாரி சிபிஐ நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளார். அவர் இன்று மாலை வெளியிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது: "உண்மை என்பது எப்போதும் உள்ளது. நீங்கள் உண்மையிலிருந்து தப்ப முடியாது", என்று கீதை சொல்கிறது. விசாரணை அதிகாரி தனது வாக்குமூலத்தில், அமித்ஷாதான் முக்கிய சதியாளர் என கூறியுள்ளார். பாஜகவிற்கு இப்படியான ஒரு நபர்தான் தலைவராக இருக்க பொருத்தமானவராக இருக்க முடியும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
The Gita says you can never escape the truth and so it has always been.
— Rahul Gandhi (@RahulGandhi) November 22, 2018
Sandeep Tamgadge has called Amit Shah a “key conspirator” in his testimony.
It's completely appropriate for the BJP to have such a man as its President. https://t.co/yDDvf27zce