டெல்லி மசோதா.. ஆம் ஆத்மியை காங்கிரஸ் ஏன் ஆதரிக்கிறது தெரியுமா..! அமித் ஷா பரபர பேச்சு
டெல்லி: டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்கு ராஜ்யசபாவில் நடந்த நிலையில், அதில் பேசிய அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே அவை முடங்கி வந்தது.. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துவதால் அவை முடங்கி வந்தது.

இதற்கிடையே அமளிக்கு நடுவே மத்திய அரசு சில மசோதாக்களையும் மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதாவை கொண்டு வந்ததது.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி அரசு இருக்கிறது. அங்கே ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகத் தீர்ப்பை வழங்கியது. இதற்கிடையே இதில் ஆம் ஆத்மி அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக்சபாவில் இந்த மசோதா தாக்கலானது.
இதற்கிடையே இன்று இது தொடர்பான விவாதம் இன்று ராஜ்யசபாவில் நடைபெற்றது. அப்போது பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு உடனடியாக டெல்லியில் ஆம் ஆத்மி அரசு விஜிலென்ஸ் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தது. அவர்கள் தான் முதல்வரின் வீடு புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்தனர். இதன் காரணமாகவே விஜிலென்ஸ் துறை அதிகாரிகளை ஆம் ஆத்மி அரசு உடனடியாக இடமாற்றம் செய்தது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. தலைநகர் டெல்லியில் சேவைகள் உட்பட அனைத்து விஷயங்களிலும் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தியதே காங்கிரஸ் அரசு தான்.. இப்போது அவர்கள்
ஆம் ஆத்மி கட்சியைத் திருப்திப்படுத்த டெல்லி சேவை மசோதாவை எதிர்க்கிறார்கள்.
இந்த மசோதா எந்தவொரு எமெர்ஜென்சியையும் விதிக்காது.. இது டெல்லி மக்களின் உரிமைகளையும் பறிக்காது. இந்த மசோதாவின் நோக்கம் அது இல்லை. சிலர் டெல்லியில் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவே மத்திய அரசு இதைக் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். இந்திய மக்கள் எங்களுக்கு அதிகாரத்தையும் உரிமையையும் வழங்கியுள்ளனர். எனவே, மத்திய அரசு எந்த மாநிலத்திடமிருந்தும் அதிகாரத்தைப் பிடுங்கத் தேவையில்லை. நாங்கள் 130 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும் அவர் கூறினார்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications