பயங்கரவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றுகிறார் அமித்ஷா?
டெல்லி: வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு கடந்த திங்கள்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து 35 ஏ சட்டப்பிரிவும் தானாகவே நீங்கியது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.
இதன் மூலம் இனி ஜம்மு காஷ்மீருக்கு தனிக் கொடி இல்லை. யார் வேண்டுமானாலும் காஷ்மீரில் அசையா சொத்துகளை வாங்க முடியும். நாடாளுமன்றத்தில் விதிக்கும் அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கு பொருந்தும்.

கெடுபிடிகள்
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. வரும் 15-ஆம் தேதி வரை அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கும் என தெரிகிறது.

அமித்ஷா
இந்த நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சுதந்திர தினம் முடியும் வரை அங்கேயே இருக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் பயம்
இந்த நிலையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக அமித்ஷா அங்கு செல்வார் என தெரிகிறது. அப்போது அவர் சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை ஏற்றுவார் என தெரிகிறது. இதுகுறித்து டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், அமித்ஷாவின் காஷ்மீர் பயணம் என்பது பாதுகாப்பு விஷயமாகும்.

முன்கூட்டியே
ஏற்கெனவே இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் அமித்ஷா பயணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட முடியாது. எனவே அவர் பயணமாகும் தேதி குறித்தும் முன்கூட்டியே தெரிவிக்க முடியாது.

தேசியக் கொடி
அமித்ஷாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை தகவல்கள் கூறுகின்றன. அமித்ஷாவும் அவரது வழிகாட்டியுமான பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் தேசியக் கொடியை இருவரும் ஏற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு
கடந்த 1992-ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையிலும் முரளி மனோகர் ஜோஷி, மோடியுடன் சென்று லால் சவுக்கில் கொடியேற்றினார். ஸ்ரீநகரின் லால் சவுக் என்பது முக்கிய வர்த்தக மையம என்பதால் அங்கு கடந்த 1948ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு கொடியேற்றினார்.
-
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications