அரியலூர் மாணவி மரணம்.. "வார்டனை" வரவேற்ற திமுக எம்எல்ஏ.. டெல்லியில் போராட்டத்தில் குதித்த ஏபிவிபி!
டெல்லி: அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன் போராடி வருகின்றது.
தஞ்சாவூர் பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூரை சேர்ந்த மாணவி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில் திடீரென ஏபிவிபி பிரிவை சேர்ந்த மாணவியர் சிலர் குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு ஏபிவிபி ஆகும்.

போராட்டம்
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இவர்கள் முதல்வர் வீட்டு வாசல் முன் போராட்டம் நடத்தி உள்ளனர். திடீரென போராட்டம் நடத்திய 32 பேர் நேற்று தமிழ்நாடு போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேர் மைனர் என்பதால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 29 பேரையும் 2022 பிப்ரவரி 28 வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். ஏபிவிபி அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிப்பாதியும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வார்டன்
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான பள்ளி வார்டன் சகாய மேரி நேற்று பெயிலில் வெளியே வந்தார். இவரை திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வரவேற்ற சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்த சகாய மேரிக்கு திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சால்வை போட்டு வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டம்
பாஜகவினர் இடையே இந்த சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சகாய மேரிக்கு திமுக எம்எல்ஏ வரவேற்பு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏபிவிபி அமைப்பினர் சென்னையில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லி ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லி தமிழ்நாடு இல்லம் முன் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இல்லம்
டெல்லி சாணக்யாபுரியில் தமிழ்நாடு இல்லம் உள்ளது. இந்த இல்லம் முன் இன்று ஏபிவிபி அமைப்பை சேர்ந்த ஜேஎன்யு பல்கலை மற்றும் டெல்லி பல்கலை மாணவர்கள் குவிந்தனர். பலர் காவி பேண்ட் அணிந்து, அரியலூர் மாணவியின் புகைப்படத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசுக்கு எதிராக டெல்லியில் கடும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு உடனே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கை என்ன
சகாய மேரியை சந்தித்த எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். மாணவி படித்த பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட ஏபிவிபி பிரிவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி ஏபிவிபி மாணவ பிரிவினர் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications