முப்படை தளபதிகளின் குழு தலைவராக (CSC) ராணுவ தளபதி நரவனே பொறுப்பேற்பு!
டெல்லி: முப்படை தளபதிகளின் குழு Chairman of the Chiefs of Staff Committee தற்காலிக தலைவராக ராணுவ தளபதி நரவனே பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதலாவது தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண்சிங் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.
இதனையடுத்து புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நாட்டில் முதல் முறையாக முப்படைகளின் தலைமை தளபதி உருவாக்கப்பட்டு பிபின் ராவத் நியமிக்கப்பட்டிருந்தார்.

அடுத்த தலைமை தளபதி யார்?
முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் புதிய முப்படைகளின் தலைமை தளபதி யார் என்பது இதுவரை தெரியவில்லை. பொதுவாக பாதுகாப்பு படை சார்ந்த நியமனங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசு நியமனம்
ஆனால் முப்படைகளின் தலைமை தளபதி பதவியானது மத்திய அரசால் நியமிக்கப்படுகிறது. இது அரசு சார்ந்த நியமனம் என்பதால் மத்திய அரசின் முடிவே இறுதியானது. இதனால் புதிய முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு தற்போதைய ராணுவ தளபதி நரவனே உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் புதிய முப்படை தளபதிகள் நியமிக்கப்படும் வரை ராணுவம் சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முதல் நடவடிக்கை
இதன் ஒருபகுதியாக, அதாவது புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை தற்காலிகமாக Chairman of the Chiefs of Staff Committee எனப்படும் முப்படை தளபதிகளின் குழுவின் தற்காலிக தலைவராக ராணுவ தளபதி நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கூடுதல் பொறுப்பாக இப்பதவியை நரவனே பொறுப்பேற்றுக் கொண்டார். முப்படைகளின் தலைமை தளபதிதான் Chairman of the Chiefs of Staff Committee-ன் தலைவராகவும் இருந்து வந்தார்.

விரைவில் அறிவிப்பு?
இக்குழுவின் பணிகளில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக ராணுவ தளபதி நரவனேவுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதிகளில் சீனியர் என்ற அடிப்படையில் நரவனே இப்பொறுப்பை தற்காலிகமாக கவனித்து கொள்வார். விரைவில் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமன அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்பது எதிர்பார்ப்பு.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications