காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சிக்கிய போலீஸ் அதிகாரிக்கு நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பா? திடுக் தகவல்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி நோக்கி காரில் சென்ற போது தீவிரவாதிகளுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்குக்கு 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்பிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஶ்ரீநகர் விமான நிலைய டி,.எஸ்.பி.யாக பணிபுரிந்தவர் தாவிந்தர் சிங். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நவீது பாபு, ஆசிப் என்கிற 2 ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் காரில் சென்ற போது தாவிதர் சிங் போலீசிடம் சிக்கினார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது பீகார், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படுகொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிதான் நவீது பாபு. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 2 தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங் சிக்கினார்.

தாவிந்தர் சிங் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தேடப்படும் தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு தாவிந்தர் சிங் ஏன் டெல்லி நோக்கி சென்றார்? குடியரசு தினத்தில் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதலிலும் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்குக்கு தொடர்பிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் 2013-ல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, தாவிந்தர் சிங் பற்றி தமது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகமதுவை டெல்லிக்கு அழைத்து வைத்து தங்க வைக்க ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங் தம்மை ஏற்பாடு செய்தார் என்பது அப்சல்குருவின் வாக்குமூலம். தமது வழக்கறிஞர் சுஷில்குமாருக்கு கைப்பட எழுதிய கடிதத்தில் அப்சல் குரு Dravinder Singh என குறிப்பிட்டிருப்பது தற்போது சிக்கிய தாவிந்தர் சிங்கைத்தான் என தெரியவந்துள்ளது.
ஆனால் தாவிந்தர் சிங் குறித்து அப்போது எந்த விசாரணையுமே நடத்தப்படவில்லை. இந்நிலையில்தான் மீண்டும் ஹிஸ்புல் தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு டெல்லி வரும் வழியில் வசமாக சிக்கியிருக்கிறார் தாவிந்தர் சிங். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications