அன்றே சொன்னேன்-ஆணவம் தலைகுனிந்தது-அநீதிக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி-ராகுல் காந்தி
டெல்லி: கடும் எதிர்ப்புக்குள்ளான விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். மேலும் விவசாயிகளின் சத்தியாகிரகத்துக்கு ஆணவம் தலைகுனிந்தது என்றும் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு (பாஜக) கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டாக முகாமிட்டு போராட்டங்களை நடத்தினர். ஒருநாள் போராட்டங்களாக இல்லாமல் குடும்பம் குடும்பமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரிலும் வாட்டும் வெயிலும் இடைவிடாமல் நீடித்தது.

மத்திய அரசு பிடிவாதம்
டெல்லியில் போராடிய விவசாயிகளுடன் மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிடிவாதத்தையே காட்டியது. எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒருபோதும் விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது என சொன்னது மத்திய அரசு. ஆனால் ஒரே ஒரு முறை கூட பிரதமர் மோடி டெல்லியில் போராடிய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

எண்ணற்ற பலிகள்
இந்த போராட்டத்தில் பங்கேற்று இதுவரை 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஹரியானா, உ.பி, உத்தரகாண்ட் மாநிலங்களின் போராட்டம் நடத்திய விவசாயிகள் கொடூர ஒடுக்குமுறைகளுக்குள்ளாகினர். உ.பி.யின் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷி மிஸ்ரா கார் ஏற்றியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெறியாட்டம் போட்டார். இந்த கொடூரத்தில் 4 விவசாயிகள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டனர்.

விவசாய சட்டங்கள் வாபஸ்
இத்தனை தியாகங்களுக்குப் பின்னர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களை மனதில் கொண்டு இன்று திடீரென விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாகவும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முறையாக ரத்து செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் காலம்தாழ்ந்த இந்த அறிவிப்பாக இருந்தாலும் உறுதியுடன் போராடிய விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றியாக இது கொண்டாடப்படுகிறது.
Recommended Video

ஆணவம் தலைகுனிந்தது- ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டுக்கு உணவளிக்கக் கூடிய விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தின் முன் ஆணவம் தலைகுனிந்துவிட்டது. அநீதிக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி, மத்திய அரசு இந்த விவசாய சட்டங்களை நிச்சயம் திரும்பப் பெறத்தான் போகிறது என தாம் பேசிய வீடியோ பதிவையும் ராகுல் காந்தி மீண்டும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், விவசாயிகளின் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். இன்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...நிச்சயம் மத்திய அரசு இந்த விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் என கூறியுள்ளார் ராகுல் காந்தி.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications