விமான எரிபொருள் விலை விண்ணை முட்டியது.. கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு!
சென்னை: ஈரான் - இஸ்ரேல் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியன் ஆயில் நிறுவனம் பிரீமியம் XP100 பெட்ரோல் மற்றும் எக்ஸ்ட்ரா க்ரீன் டீசல் விலையும் உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் விமான எரிபொருள் கட்டணம் உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் கட்டணம் கணிசமாக உயர்ந்து இருப்பதால் விமான கட்டணம் கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சம் பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் எரிபொருள் சப்ளை குறைந்துள்ள நிலையில், தட்டுப்பாடு ஏற்படாத வாறு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கச்சா எண்ணெய் கொள்முதல் விலை அதிகரித்து இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்படாதவாறு உற்பத்தி வரி பெட்ரோல், டீசலுக்கு கடந்த வாரம் குறைக்கப்பட்டது. அதேநேரத்தில், பிரீமியம் ரக பெட்ரோல் விலை கடந்த மாதம் 20 ஆம் தேதி அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பிரிமியம் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் பிரீமியம் XP100 பெட்ரோல் மற்றும் எக்ஸ்ட்ரா க்ரீன் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. மேலும், விமான எரிபொருள் (ATF) விலை கிலோலிட்டருக்கு ₹2 லட்சத்தைத் தாண்டி உச்சம் பெற்றுள்ளது. இது நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது. XP100 பெட்ரோல் லிட்டருக்கு ₹149-ல் இருந்து ₹160 ஆகவும், எக்ஸ்ட்ரா க்ரீன் பிரீமியம் டீசல் ₹91.49-ல் இருந்து ₹92.99 ஆகவும் உயர்ந்துள்ளது.
உயர் ரக வாகனங்களுக்கான இந்தியாவின் முதல் 100-ஆக்டேன் பிரீமியம் பெட்ரோல் இது. விலையேற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், உலகின் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்கா-ஈரான் போரால் தளவாட செலவுகள் அதிகரித்ததே காரணம் என நம்பப்படுகிறது. விமான எரிபொருள் கட்டணம் கணிசமாக உயர்ந்து இருப்பதால் விமான கட்டணம் கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சம் பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications