அயோத்தி தீர்ப்பு வரப்போகிறது.. அதைப்பற்றி மட்டும் பேசாதீங்க.. அமைச்சர்களுக்கு மோடி அதிரடி உத்தரவு
Recommended Video
டெல்லி: அயோத்தி குறித்து தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
அயோத்தி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை டெல்லியில் உள்ள தனது அமைச்சர்கள் குழுவுடன் கலந்துரையாடினார், அப்போது அயோத்தி விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் நாட்டில் நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தி ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை நவம்பர் 17 ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறுவதற்கு முன்னர் வழங்க வாய்ப்புள்ளது.

மோடி பேச்சு
முன்னதாக அக்டோபர் 27 ம் தேதி தனது "மான் கி பாத்" வானொலி நிகழ்ச்சியில் பிரதர் மோடி பேசுகையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ம் ஆண்டு அளித்த தீர்ப்பின் போது, அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை எவ்வாறு தடுத்தனர் என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். ஒன்றுபட்ட குரல் நாட்டை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் மோடி தனது பேச்சின் போது விவரித்தார்.

பிரதமர் மோடி அறிவுறுத்தல்
இந்நிலையில் தான் நேற்று அமைச்சர்களிடம் பிரதமர் மோடி பேசும் போது, அயோத்தி தீர்ப்பு விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நல்லுறவு மற்றும் நல்லிணக்க சூழ்நிலையைப் பேண வேண்டும் என்றும் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வெற்றி மற்றும் தோல்வி என்ற ரீதியில் தீர்ப்பைக் காணக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆத்திரமூட்டும் பேச்சு
ராமர் கோயில் பிரச்சினையில் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஆளும் பாஜக தனது நிர்வாகிகள் மற்றும் செய்தித் தொடர்பாளர்களைக் கேட்டுக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு பிரதமரிடம் இருந்தும் இதே கருத்துக்கள் வந்துள்ளன. அமைதியை நிலைநாட்ட தங்கள் தொகுதிகளுக்கு செல்லுமாறு பாஜக தனது எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தீர்ப்பு குறித்து
முன்னதாக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு இதேபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தது. அண்மையில் நடந்த உயர்மட்ட தலைவர்கள், கூட்டத்தில், ராமர் கோயில் தீர்ப்பு சாதகமாக இருந்தால் கொண்டாடவோ அல்லது ஊர்வலங்களை நடத்தவோ கூடாது என்று கேட்டுக் கொண்டது.

அமைதியை நிலைநாட்ட
இதனிடையே மூத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் செவ்வாய்க்கிழமை முக்கிய முஸ்லீம் மதகுருக்கள் மற்றும் அறிஞர்களை சந்தித்து பேசி மத நல்லிணக்கத்தை பேணுவது குறித்து விவாதம் நடத்தினார்கள். இந்த கூட்டம் டெல்லியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இல்லத்தில் நடந்தது. அப்போது அனைவரும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications