புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்- பல மாநிலங்களில் விவசாயிகள் உக்கிர போராட்டம்!
டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் சாலை மறியல், வேளாண் சட்ட நகல்கள் எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

250 அமைப்புகளின் பாரத் பந்த்
இந்நிலையில் 250க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இன்று பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாரத் பந்த் போராட்டத்துக்கு முழு ஆதரவு உள்ளது. விவசாயிகள் நெடுஞ்சாலைகளையும் ரயில் தண்டவாளங்களையும் மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் எருமைகள், டிராக்டர்கள்
பீகாரில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் சாலைகளில் டிராக்டர்களை இயக்கி போராட்டம் நடத்தப்பட்டது. பீகாரின் தர்பங்காவில் சாலைகளில் எருமைகளை ஓடவிட்டு ஆர்ஜேடி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப்பில் 36 விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்துள்ளன. ஜலந்தரில் அமிர்தசரஸ்- டெல்லி நெடுஞ்சாலையை விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கர்நாடகா போராட்டம்
இப்போராட்டங்களால் டெல்லி- சண்டிகர் இடையே பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. கர்நாடகா- தமிழ்நாடு நெடுஞ்சாலையில் பொம்மனஹல்லி அருகே கர்நாடகா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர்- புனே நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதலே விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி- உபி எல்லையில் போலீஸ் குவிப்பு
விவசாயிகளின் போராட்டங்களால் டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் பல ரயில் சேவைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
Recommended Video

திருச்சியில் போராட்டம்
தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மண்டை ஓடுகள், தூக்கு கயிறு ஆகியவற்றுடன் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்சி- கரூர் நெடுஞ்சாலையை மறித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தஞ்சை- திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications