பீகார் சட்டசபை தேர்தலில் 16.6 லட்சம்... இடம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கலாம்!!
டெல்லி: பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாத மத்தியில் சட்டசபை தேர்தல் நடைபெறும். 16.6 லட்சம் இடம் பெயர் தொழிலாளர்கள் பீகார் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ''பீகார் தேர்தலில் 18.87 லட்சம் விவசாயிகள் வாக்களிப்பார்கள். மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 38 தொகுதிகள் ரிசர்வ்டு தொகுதிகளாக இருக்கும். இரண்டு தொகுதிகள் எஸ்டிக்கு ஒதுக்கப்படும். 6 லட்சம் பிபிஇ கிட்கள், 47 லட்சம் மாஸ்க்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பீகாரில் மொத்தம் 18.87 லட்சம் இடம் பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 16.6 லட்சம் தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். வாக்கு செலுத்துவதற்கு வசதியாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குகள் செலுத்தலாம். முன்பு இது மாலை 5 மணி வரை என்று இருந்தது. இந்த நேர நீட்டிப்பு மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொருந்தாது.
ஆன் லைன் வாயிலாக தேர்தலுக்கான டெபாசிட் தொகையை செலுத்தலாம். ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து அதற்கான நகலை எடுத்து பின்னர் ஆர்ஓவிடம் சமர்பிக்கலாம்.
பீகார் மாநில தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதல் கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3ஆம் தேதியும் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதியும் நடைபெறுகிறது.
முதல் கட்ட வேட்புமனு தாக்கல் அக்டோபர் 8ஆம் தேதி துவங்குகிறது. அக்டோபர் 12ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெறலாம். தேர்தல் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வாபஸ் பெறலாம். தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.
மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 20ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 23ஆம் தேதி வாபஸ் பெறலாம். தேர்தல் தேதி நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
முதல் கட்டத்தில் 71 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டத்தில் 94 தொகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக 78 தொகுதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications