கொரோனா தடுப்பு நடவடிக்கையில் டிஜிட்டல் பயன்பாடுகள்... மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு
டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் டிஜிட்டல் பயன்பாடுகளை முழுமையாக பிரதமர் மோடி பயன்படுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டி பில்கேட்ஸ் இன்று எழுதியுள்ள கடிதம்:
கொரோனா தடுப்புக்காக தங்களது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் டிஜிட்டல் பயன்பாடுகளை இந்தியா முழுமையாக பயன்படுத்துகிறது.
கொரோனா பாதிப்பில் தொடர்புகளின் தடம் அறிதல், கணகாணிப்பு உள்ளிட்டவைகளுக்கு டிஜிட்டல் பயன்பாடுகளை இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது முயற்சிகளை பாராட்டுகிறேன்.
கொரோனா தடுப்பு- மருத்துவர்களை பாதுகாக்க நடவடிக்கை- பிரதமர், முதல்வருக்கு டாக்டர்கள் நன்றி
நாடு முழுவதும் லாக்டவுனை அமல்படுத்தியது. கொரோனா பரிசோதனைகளை விரிவாக்கம்செய்தது. கொரோனா அறிகுறி தென்படுவோரை தனிமைப்படுத்துதல், ஹாட்ஸ்பாட் பகுதிகளை அடையாளப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை
Recommended Video
இந்தியர்களின் சமூகப் பாதுகாப்பை உங்களது அரசு உறுதி செய்கிறது. அனைவருக்குமான பொது சுகாதாரத்தை உங்களது அரசு உறுதிப்படுத்துவதற்கு பாராட்டுகள். இவ்வாறு பில்கேட்ஸ் கூறியுள்ளார்.