Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகாரில் 130-138 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும்.. சாணக்யா வெளியிட்ட கணிப்பு என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை முடிவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து வரும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீது கவனம் திரும்பி இருக்கிறது. தற்போது பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பல கணிப்புகள் மீண்டும் பீகாரில் பாஜக ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணியே வெற்றி பெறும் என கணித்துள்ளன. சாணக்யா வெளியிட்ட கணிப்பில் 130-138 இடங்களை பாஜக கூட்டணியும், 100-108 இடங்களை காங்கிரஸ் ஆர்ஜேடி அணியும் பெறும் என கணித்துள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை முடிவடைந்துவிட்டது. தேர்தல் முடியும் வரை கணிப்புகள் வெளியிடக்கூடாது என்று தடை உள்ளது. இதனால் கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடியும் வரை வெளியிடப்படவில்லை. தேர்தல் விதிகளின்படி, மாலை 6 மணிக்கு பின்னரே கணிப்புகளை வெளியிட முடியும்.அதன்படி வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதனால் அதன்மீது மக்களின் கவனம் திரும்பி உள்ளது.

Bihar BJP exit poll

பல தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க தங்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர். அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் பார்வையாளர்களும் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கான முதல் அறிகுறிகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

பீகார் 2020 வாக்குக் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவை?

2020 பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் ஆர்ஜேடி தலைமையிலான மகாகத்பந்தனுக்கு குறுகிய வெற்றியைக் கணித்திருந்தார்கள். சராசரியாக 11 கருத்துக் கணிப்புகள் கூட்டணி 125 இடங்களைக் கொண்டுள்ளன, இது 243 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் பெரும்பான்மை இலக்கான 122 ஐ விட சற்று அதிகமாக கணித்திருந்தன. அதே நேரத்தில் ஜேடியு தலைமையிலான என்டிஏ 108 இடங்கள் தான் பெறும் என கூறியிருந்தன

இருப்பினும், இறுதி முடிவுகள் வேறு விதமாக இருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களைப் பெற்று, பாதியைக் கடந்து சென்றது, அதே நேரத்தில் மகா கூட்டணி 110 இடங்களைப் பிடித்தது. அந்த ஆண்டு, பிரிக்கப்படாத லோக் ஜனசக்தி கட்சி (LJP) சுயேச்சையாகப் போட்டியிட்டது, இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் முகேஷ் சஹானி தலைமையிலான விகாஷீல் இன்சான் கட்சி (VIP) அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது.

சராசரியாக, 2020 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற இடங்களை விட 17 இடங்கள் குறைத்து மதிப்பிட்டன, மேலும் மகா கூட்டணியை 15 இடங்கள் அதிகமாக மதிப்பிட்டிருந்தன. கருத்துக் கணிப்பு நடத்துபவர்களில், பேட்ரியாடிக் வோட்டர், பி-மார்க் மற்றும் ABP நியூஸ்-சிவோட்டர் ஆகியவை உண்மையான முடிவுக்கு மிக அருகில் இருந்தனர். இந்த கணிப்புகள்தான் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என கூறின.

அதேநேரம், நியூஸ் 18-டுடேஸ் சாணக்யா, யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. இவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி 55 இடங்களும், காங்கிரஸ் ஆர்ஜேடி அடங்கிய மகாகத்பந்தனுக்கு 180 இடங்களும் கிடைக்கும் என்று கணித்து இருந்தன. ரிபப்ளிக்-ஜன் கி பாத், இந்தியா டுடே/ஆஜ் தக்-ஆக்சிஸ் மை இந்தியா, மற்றும் நியூஸ் 18-டுடேஸ் சாணக்யா ஆகிய மூன்று நிறுவனங்களுமே காங்கிரஸ் ஆர்ஜேடி அடங்கிய மகாகத்பந்தனுக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக்கும் என்றே கணித்திருந்தன. ஆனால் இறுதியில் அந்த கணிப்புகள் பொய்த்து போனது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் அதிக இடங்களை வென்றது.

இந்நிலையில் 2025 சட்டசபை தேர்தலை பொறுத்தவரை பெரும்பாலான கணிப்புகள், பாஜக ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய என்டிஏ கூட்டணி தான் அதிக இடங்களுடன் வெற்றி பெறும் என கணித்துள்ளன. சாணக்யா ஸ்டேடர்ஜிஸ் வெளியிட்ட கணிப்பில் 130-138 இடங்களை பாஜக கூட்டணியும், 100-108 இடங்களை காங்கிரஸ் ஆர்ஜேடி அணியும் பெறும் என கணித்துள்ளது. பிற கட்சிகள் 3-5 இடங்களை பெறும் என கணித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+