எங்க கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது.. உச்சநீதிமன்றத்தில் ம.பி. காங்கிரஸ் புதிய மனு தாக்கல்
டெல்லி: தங்களது கட்சி எம்.எல்.ஏக்களை பாரதிய ஜனதா கட்சி கடத்தி வைத்துள்ளதாகவும் அவர்களை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் கடத்தப்பட்டு கர்நாடகாவில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விடுவித்தால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் என்கிறார் முதல்வர் கமல்நாத்.

இந்நிலையில் நேற்று மத்திய பிரதேச சட்டசபை கூடிய போதும் கொரோனா அச்சத்தால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் முதல்வர் கமல்நாத் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது. பின்னர், முதல்வர் கமல்நாத் தரப்பு 24 மணிநேரத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் நாளை காலை விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் சார்பில் ஒரு புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களது கட்சியின் 16 எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தி வைத்துள்ளது; அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications