2 ஆண்டுகள்- 8 மாநிலங்கள், 218 இடைத்தேர்தல்களில் தோல்வி...பீகாரில் என்ன ஆகுமோ? பதற்றத்தில் பாஜக
டெல்லி: 2 ஆண்டுகளில் மட்டும் 8 மாநிலங்களில் பாஜக தோல்வியை சந்தித்திருக்கிறது; மேலும் 218 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில் பீகார் முடிவுகளை பெரும் பதற்றத்துடன் பாஜக எதிர்கொண்டிருக்கிறது.
Recommended Video
பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பீகாரில் பாஜக இதுவரை தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது இல்லை.
வட இந்தியாவில் பாஜகவால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடியாத ஒரே மாநிலம் பீகார்தான். பீகாரில் எப்படியும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாக வேண்டிய நிலையில் பாஜக இருக்கிறது.

8 தேர்தல்களில் தோல்வி
பாஜகவைப் பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளில் 8 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியை தழுவி இருக்கிறது. 2018-ல் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா சட்டசபை தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது.

ஆட்சி கவிழ்ப்புகள்
2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது பாஜக. கர்நாடகாவிலும் தேர்தலில் பாஜக வெல்ல முடியவில்லை. அங்கு குமாரசாமி ஆட்சியை கவிழ்த்துதான் ஆட்சியில் உட்கார்ந்தது பாஜக. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்த்துதான் ஆட்சியில் இருக்கிறது பாஜக.

சிவசேனா எஸ்கேப்
ஒடிஷா, மகாராஷ்டிரா தேர்தல்களிலும் பாஜகவால் வெல்ல முடியவில்லை. மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகால கூட்டணி கட்சியான சிவசேனாவை பாஜக இழந்ததுதான் மிச்சம். மேலும் 2 ஆண்டுகளில் 218 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றிருக்கிறது.

பீகார் எக்ஸிட் போல்
இந்த நிலையில் பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள், ஜேடியூ-பாஜக அணி ஆட்சி அமைக்கும் என்றெல்லாம் கூறவில்லை. தொங்கு சட்டசபை அமையலாம் அல்லது ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் ஆட்சி அமையலாம் என்றுதான் எக்ஸிட் போல் முடிவுகள் கூறி இருக்கின்றன.

பீகார் என்னவாகுமோ?
இப்பின்னணியில் பீகாரில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனால் தேர்தல் முடிவுகளை பெரும் பதற்றத்துடன் பாஜகவினர் எதிர்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications