பஹல்காம் அட்டாக் பற்றி மோடிக்கு முன்பே தெரியுமா? கார்கே குற்றச்சாட்டால் பாய்ந்து வந்த பாஜக தலைகள்!
டெல்லி: பஹல்காம் தாக்குதல் பற்றி உளவுத்துறை மூலம் 3 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய நிலையில், அவரது குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளது பாஜக. கார்கே, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அற்ப அரசியல் செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கார்கே வைத்த குற்றச்சாட்டு
இநிந்லையில், "பிரதமர் மோடிக்கு, மூன்று நாட்களுக்கு முன்னரே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்போவது தெரியும். அதன் காரணமாகவே அவரது காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டது என தகவல் கிடைத்துள்ளது" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "தீவிரவாத தாக்குதல் நடக்கப்போவது மத்திய அரசுக்கு முன்பே தெரியும். குறிப்பாக மூன்று நாட்களுக்கு முன்பாகவே உளவுத்துறை பிரதமர் மோடிக்கு தாக்குதல் தொடர்பான தகவலை கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டது.
பிரதமர் மோடி அவருடைய உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை. எதற்காக காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தாமல் விட்டீர்கள். எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவ படை, ராணுவம் இருக்கிறது. இவற்றையெல்லாம் உஷார் படுத்தி பாதுகாப்பை ஏன் உறுதி செய்யவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.
பாஜக கண்டனம்
பஹல்காமில் 26 பேர் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை தகவலை அரசாங்கம் புறக்கணித்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியது, நமது ஆயுதப் படைகளின் "மன உறுதியைக் குறைக்கும்" முயற்சி என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
கார்கேவின் குற்றச்சாட்டுகளை பாஜக செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா நிராகரித்துள்ளார். அவர் கூறுகையில், "காங்கிரஸிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பயங்கரவாதத் தாக்குதலுக்கு எப்போதுமே பாதுகாப்பு குறைபாடு என்பது பிரதான காரணம் தான். ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு முன்பே பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஊகத்தின் அடிப்படையில்
எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் மோடியின் ரத்து செய்யப்பட்டதாகக் கூறுவது ஊகத்தின் அடிபடையிலானது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பாதுகாப்பு குறைபாட்டை ஒப்புக்கொண்டது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் போதெல்லாம், அக்டோபர் 2023 இல் இஸ்ரேலில் நடந்த தாக்குதலாக இருந்தாலும் சரி, அமெரிக்காவில் 9/11 ஆக இருந்தாலும் சரி, அந்த விஷயத்தில், இந்திரா அல்லது ராஜீவ் காந்தியின் படுகொலையாக இருந்தாலும் சரி, எப்போதும் பாதுகாப்பு குறைபாடு இருக்கும்.
அற்ப அரசியல்
தாக்குதல்களைத் தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் நூறு சதவீத வெற்றியை அடைய வேண்டும், ஆனால் பயங்கரவாதிகள் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றால் போதும். பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைக்கு நாம் தயாராகி வரும் நேரத்தில் கார்கே இப்படி பேசுவது அவர் அற்ப அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதைக் காட்டுகிறது.
மல்லிகார்ஜுன கார்கே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட ஒன்றைப் பற்றிப் பேசாமல், அதிக முதிர்ச்சியைக் காட்டியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கார்கே இரட்டை வேடம்
முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து, கார்கே இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். "ஒருபுறம் அவர் நாட்டுடன் நிற்பதாகக் கூறுகிறார். அதேசமயம் நமது நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமரை அவர் விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஒரு பெரிய கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியில் மூத்த தலைவரிடமிருந்து இதைவிட ஒரு பொறுப்பற்ற கருத்து வரமுடியாது. பாதுகாப்பு ஒத்திகையில் மக்கள் அனைவரும் நாட்டுடனும் அரசுடனும் உறுதுணையாக இருக்கும்போது, இதுபோன்ற கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது மிகுந்த மனவேதனையை உண்டாக்குகிறது" என பதிலடி கொடுத்துள்ளார்.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications