காசிப்பூர் எல்லை போராட்டத்தில் ஊடுருவிய நபருக்கு 'பளார்' விட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத்
டெல்லி: டெல்லி காசிப்பூர் எல்லைப் பகுதியில் போராட்டத்துக்குள் ஊடுருவிய நபருக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
60 நாட்களுக்கும் மேலாக அமைதியாக நடைபெற்று வந்தது டெல்லி விவசாயிகள் போராட்டம். இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் விஷமிகள் குடியரசு தினத்தன்று ஊடுருவி போலீசாருடன் மோதினர்.

இதனால் விவசாயிகள் போராட்டத்தில் இருந்து 4 அமைப்புகள் விலகின. இதனையே ஒரு சந்தர்ப்பமாக கருதி விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லி காசிப்பூர் எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் போது விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருநபர் கையில் தடியுடன் கூட்டத்துக்குள் நுழைந்து பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார்.
#WATCH: Bharatiya Kisan Union spokesperson Rakesh Tikait slaps a person at Ghazipur border (Delhi-Uttar Pradesh). pic.twitter.com/fhRSbdlhgY
— ANI (@ANI) January 28, 2021
இதனைப் பார்த்து கொண்டிருந்த ராகேஷ் திகாயத் அந்த நபரை அழைத்து விசாரித்தார். அவர் குழப்பமான பதிலை சொன்னதால் அந்த இடத்திலேயே பளார் என கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். பின்னர், பாஜகவை சேர்ந்த இந்த நபர் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார். அவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றார் ராகேஷ் திகாயத்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications