27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்?
டெல்லி: அஸ்ஸாமில் போடோ இன மக்களுக்காக தனி மாநிலம் கோரும் தீவிரவாத அமைப்பினருடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. 27 ஆண்டுகளில் மத்திய அரசு உருவாக்கியுள்ள இந்த 3-வது ஒப்பந்தமாவது போடோலாந்து தனி மாநிலம் கோரி நடைபெறும் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியின் வடபகுதிகளை ஒருங்கிணைத்து போடோலாந்து என்கிற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது போடோ இன மக்களின் கோரிக்கை. இதற்காக பல்வேறு ஆயுத குழுக்களும் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் 1993-ம் ஆண்டு முதலாவது போடோலாந்து ஒப்பந்தத்தை மத்திய அரசு உருவாக்கியது. மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் போடோ மக்கள் செயற்பாட்டு கமிட்டி ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி போடோலாந்து சுயாட்சி கவுன்சில் அமைக்கப்பட்டு அதற்கு 30-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

போடோலாந்து விடுதலைப் புலிகள்
ஆனால் போடோ இன மக்கள் இதில் திருப்தி அடையவில்லை. இதனால் போடோலாந்து விடுதலைப் புலிகள் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பு 1996-ல் உதயமானது. பின்னர் போடோலாந்து விடுதலைப் புலிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக 2003-ம் ஆண்டு மத்திய அரசுடன் 2-வது போடோலாந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதிய கவுன்சில் அமைப்பு
அப்போது 2,641 போடோலாந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். பெரும்பாலான போடோலாந்து விடுதலைப் புலிகள், மத்திய ரிசர்வ் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த 2-வது ஒப்பந்தத்தின் படி போடோலாந்து பிராந்திய கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட்டது. முந்தைய போடோலாந்து சுயாட்சி கவுன்சிலைவிட இது கூடுதல் அதிகாரங்களை கொண்டதாக அமைக்கப்பட்டது.

போடோக்கள் மீண்டும் போராட்டம்
அஸ்ஸாமின் கோக்ராஜ்கர், சிராங், உடல்குரி மற்றும் பஸ்கா மாவட்டங்களின் 3,082 கிராமங்க்கள் இந்த பிராந்திய கவுன்சிலில் இணைக்கப்பட்டன. ஆனாலும் போடோ இன மக்களின் போராட்டம் ஓயவில்லை. போடோலாந்து தனிமாநிலம் கோரி அனைத்து போடோ மாணவர் ஒன்றியம் (ஏபிஎஸ்யூ) போராட்டங்களை தீவிரமாக நடத்தியது. இதையடுத்து போடோ தனிமாநிலம் கோரிய ஏபிஎஸ்யூ, என்டிபிஎஃப்பி ஆகியவற்றுடன் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியது.

3-வது போடோலாந்து ஒப்பந்ந்தம்
இதன்விளைவாகத்தான் நேற்று 3-வது போடோலாந்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 2-வது போடோலாந்து ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட போடோலாந்து பிராந்திய கவுன்சில் என்பது தற்போது போடோலாந்து பிராந்திய பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது 60 உறுப்பினர்களை கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய போடோலாந்து ஒப்பந்தத்தை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்கின்றனர். இருப்பினும் இந்த போடோலாந்து அமைதி ஒப்பந்தம் 2020-ல் உறுதி அளிக்கப்பட்ட ஷரத்துகளை மத்திய அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் போடோ இன மக்கள் கிளர்ச்சியில் இறங்குவார்கள் என்பது கடந்த காலங்களின் வரலாறு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications