நடு நடுங்கிய டெல்லி.. சுப்ரீம் கோர்ட் பெண் வக்கீல் கொலை.. போலீசிடம் தப்பிக்க கணவர் செய்த செயல்..ஷாக்
டெல்லி: டெல்லியில் உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞரை அவரது கணவரே கொலை செய்து உடலை பாத்ரூமில் வைத்து விட்டு தானும் வீட்டிற்குள்ளே மறைந்து இருந்த திடுக்கிட வைக்கும் கொடூர கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் ரேனு ஷின்கா (வயது 61). தனது கணவருடன் நொய்டாவில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். ரேனு ஷின்காவின் கணவரும் இந்திய வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். நல்ல வருமானம் கவுரமான வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருந்த இந்த தம்பதிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனைவி என்று கூட பாராமல் அஜய் நாத், ரேனு சின்காவை கொலை செய்து வீட்டின் பாத்ரூமிலேயே உடலை மறைத்து வைத்துள்ளார். வழக்கம் போல் ரேனு சின்காவின் சகோதரர் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ரேனு சின்காவின் சகோதரர் போலீசிடம் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்த போதுதான் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவு பூட்டியிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டின் பாத்ரூமில் ரேனுவின் உடல் கிடந்தது. வீட்டில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்திய போது அவரது கணவரை காணவில்லை. இதனால், போலீசாரின் சந்தேகம் அவர் பக்கம் திரும்பியது. ரேனுவின் சகோதரும் தனது சகோதரிக்கும் அவரது கணவரான அஜய் நாத்திற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் கூறினார்.
இதனால், அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. தொடர்ந்து வீடு முழுக்க தேடிய போது வீட்டின் ஸ்டோர் ரூமில் மறைந்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், தனது பங்களாவை ரூ.4 கோடிக்கு விற்க முடிவு செய்து அதற்காக அட்வான்சும் வாங்கி விட்டதாகவும்.
ஆனால் மனைவி வீட்டை விற்க எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்பட்டு ரேணு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது மரணத்திற்கான காரணம் உறுதி செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்து போலீசார் ஆவணங்களை சேகரித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications