மத்திய பட்ஜெட்: மாத சம்பளம் வாங்குபவர்கள் என்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்
டெல்லி: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கும் வரை நடைமுறையில் இருக்கும். மே அல்லது ஜூனில் புதிய அரசு அமைய உள்ளதால், அது வரையிலான காலகட்டத்திற்கு இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரவிருக்கும் நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவுத் திட்டங்களை கோடிட்டுக் காட்டும் இந்த பட்ஜெட் இந்தியாவின் பொருளாதார நாட்காட்டியில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பாக மக்களை கவரும் விதமாக எதுவும் அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கலுக்கான விலக்கு குறைந்தது 5 லட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும் என்று வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்கள் மத்தியில் உள்ளது. அதேபோல் வரி விகிதங்களையும் 10% 20% 30% என மட்டுமே என எளிமைப்படுத்தி செஸ் மற்றும் சர்ஜார்ஜ்கள் ஆகியவை நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சம்பளம் வருவாயை தவிர பிற வருவாய் எதுவும் இல்லாதவர்களுக்கு டிடிஎஸ் உடன் நிறுவனங்கள் சமர்பிப்பததை தானாக ஆட்டோ ரிட்டர்ன் (auto return) ஆக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட எதிர்பர்ப்புகளும் உள்ளன.
அதேபோல மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இருக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. முக்கியமாக பலர் பயன்படுத்தும் பழைய வரி விதிப்பு முறையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி உள்ளது. எனவே இது குறைக்கப்படுமா என்ற கேள்வி நடுத்தரத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.
வரி செலுத்துபவர் புதிய வரி முறையை தேர்வு செய்தால், அவர் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இந்த வரம்பை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அரசு உயர்த்த வேண்டும் என்று தற்போது மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் இது தொடர்பான பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு வரும் 1 ஆம் தேதி விடை கிடைத்துவிடும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications