மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்-பிரதமர் மோடி சீனியர்களுடன் ஆலோசனை! எதிர்க்கட்சிகளுடன் கார்கே வியூகம்!
ஆளும் கட்சி, எதிர்க் கட்சி எம்பிக்கள் அமளியால் 4-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2-வது அமர்வு இன்று 4-வது நாளாக முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூத்த அமைச்சர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக அரசுக்கு எதிராக ஆலோசனை மேற்கொண்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது முதலே இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன. ஆளும் பாஜகவைப் பொறுத்தவரையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை கையில் எடுத்துள்ளது.

அண்மையில் லண்டன் சென்ற ராகுல் காந்தி, அங்கு பேசுகையில் இந்திய நாடாளுமன்றம், நீதித்துறை ஒடுக்கப்படுவதாக விம்ர்சித்திருந்தார். வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்திய நாடாளுமன்றத்தை விமர்சித்ததால் ராகுல் காந்தியை கண்டிக்க வேண்டும்; ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் இருசபைகளிலும் வலியுறுத்தினர். பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதனை திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் என்றார் மல்லிகார்ஜூன கார்கே. மேலும் அதானி குழும மோசடிகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை. அத்துடன் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கும் விசாரணை ஏஜென்சிகளுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியும் நடத்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதேபோல், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று 4-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கியது. இன்று காலை சபை தொடங்கியதும் அமளி தொடர்ந்ததால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. ஆளும் கட்சி எம்பிக்கள், ராகுல் காந்தி விவகாரத்தை கையில் எடுத்து முழக்கமிட்டன்ர். எதிர்க்கட்சியினரோ அதானி விவகாரத்தில் கோஷம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் 2 சபைகளும் இன்றும் முடங்கின.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications