முடிந்துபோன விஷயம்.. கிளற வேண்டாம்.. பணமதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசு வாதம்
டெல்லி: ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இதில், நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது என்று மத்திய அரசு விவாதித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.
கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிப்பது, பயங்கரவாத நிதியை தடுப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. அதேபோல், புதிதாக ரூ.500, 2 ஆயிரம் ரூபாய் தாள்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

ஏ.டி.எம் வாசல்களில் காத்திருந்த மக்கள்
மக்கள் வங்கிகளில் தங்கள் கையிருப்பில் இருந்த பணத்தை டெபாசிட் செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. அதேபோல், புதிய ரூபாய் தாள்கள் கிடைக்காமல் மக்கள் ஏ.டி.எம் வாசல்களிலும் வங்கிகளின் முன்பாகவும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இருந்தாலும் பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

57 ரிட் மனுக்கள்
இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 57 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை தற்போது நீதிபதிகள் நசீர், கவாய், போபண்ணா, ராமசுப்பிரமணியன் மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகி பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

ரிசர்வ் வங்கிக்கே அதிகாரம்
ப.சிதம்பரம் முன்வைத்த வாதத்தில், நட்டில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கிதான் திரும்பப் பெற முடியும். ரிசர்வ் வங்கிக்கே இந்த அதிகாரம் உள்ளது. ஆனால், இதனை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. தன்னிச்சையாக அறிவித்தது சரியான நடைமுறை இல்லை. மத்திய அரசின் முடிவுக்கு தடை விதித்தால்தான் மற்றொரு பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாவதை தடுக்க முடியும்" என்று தனது வாதங்களை முன்வைத்தார்.

நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது
மத்திய அரசின் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், முந்தைய காலத்திற்கு இழுத்து செல்வதன் மூலமோ.. இந்த விவகாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு செல்வதன் மூலமோ எந்த உறுதியான நிவாரணமும் கிடைக்கப்போவது இல்லை என்ற நிலையில், நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது" என்றார்.

செயல்படுத்திய விதம் தவறானது
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நிர்ணையித்த இலக்குகளை அடைந்துவிட்டதாக நீங்கள் வாதாடுகிறீர்கள்.ஆனால் இதை செயல்படுத்திய விதம் தவறானது என்ற வாதங்களுக்கு தீர்வு கூற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். விதிகள் பின்பற்றப்பட்டதா? இல்லையா? என்று எங்களுக்கு காட்டுங்கள்" என்றனர். மேலும், ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை நடத்திய பிறகுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அடுத்த கட்ட விசாரணை
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், அரசு எடுத்த கொள்கை முடிவுகளை பற்றி நீதிமன்றம் மறு ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி சட்டம் 26(2) பணமதிப்பிழப்பு குறித்து அரசாணை வெளியிடுவதற்கு அதிகாரம் உள்ளது" என்றார். இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications