காவிரி: பாஜகவுடன் சேர்ந்து கர்நாடகா காங்கிரஸ் அரசு துரோகம்- தமிழ்நாடு மனுவை டிஸ்மிஸ் செய்ய மனு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறக்க கோரும் தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு பிரமாணப் பத்திரத்தில் வலியுறுத்தி உள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதம் 53 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டுக்கு 15 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டது. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையமோ வினாடிக்கு 10,000 கன அடி நீரை மட்டுமே தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உத்தரவிட்டது.

Cauvery Case: Karnataka Govt files affidavit in Supreme Court

இதனையடுத்து தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசின் இந்த மனுவை நீதிபதி கவாய் தலைமையிலான புதிய பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த காவிரி வழக்கு விசாரணை நாளை நீதிபதி கவாய் பெஞ்ச் முன்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று காவிரி வழக்கில் கர்நாடகா அரசு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாடு அரசு காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடிநீரை கோரியிருக்கிறது. கர்நாடகாவில் வறட்சி நிலவும் நிலையில் இவ்வளவு நீரை திறந்துவிட முடியாது. ஆகையால் தமிழ்நாடு அரசு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா பாஜக போராட்டத்தை தொடங்கி வைத்தது. இதனையடுத்து கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.மேலும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு சாதகமாக கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டி இருந்தது.

பின்னர் நேற்று கர்நாடகா அரசு, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று, தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கர்நாடகா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, காவிரி நீர் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது கர்நாடகா அரசு தமது தரப்பு வாதத்தை முன்வைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+