காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் துவங்கியது.. தமிழகத்துக்கு தண்ணீர் வருமா? தலைநகரில் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடியிருக்கிறது.. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் இன்றைய கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் கடந்த 11-ம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது.

கூட்டம்: இந்த கூட்டத்திலும், தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது..
ஆனால் 20 நாட்களுக்கு 1 டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது என்று சொன்ன கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறியிருந்தார்.
பரிந்துரை: இப்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்திற்கு கர்நாடக மாநில அணைகளிலிருந்து தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டும்கூட, கர்நாடக அரசு அதை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே, கர்நாடக மாநில அரசுக்கு எதிராக அனைத்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.. தமிழக அரசு இந்த வழக்கை தொடர போவதாக தெரிகிறது.
இன்று கூடுகிறது: இப்படிப்பட்ட சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்றைய தினம் கூடியிருக்கிறது.. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று பிற்பகல் இந்த கூட்டம் துவங்கி நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அனைத்து மாநில அதிகாரிகளுமே இதில் பங்கேற்றுள்ளனர்.. தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் இந்த கூட்டத்தில் தங்கள் கருத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.
டிஎம்சி தண்ணீர்: தமிழக அரசு சார்பில் காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தலின்படி, கர்நாடக அரசு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்துவிடல்லை என்பதால், அதை உடனடியாக திறந்து விட ஆணையிடும்படி, இந்த கூட்டத்தில் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது..
மொத்தத்தில்,தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை பேசிவருவதால், இன்றைய தினம் தலைநகரில் நடந்துவரும் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்தை தமிழகம், கர்நாடக, கேரள மாநிலங்களில் ஏற்படுத்தி வருகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications