நீதிபதிகள் பற்றிய அவதூறு கருத்து... ஐந்து பேரை வரிசையாக கைது செய்த சிபிஐ.. அதிரடி நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து வேண்டுமென்றே அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் இதுவரை ஐந்து பேரை சிபிஐ கைது செய்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் இன்று இரண்டு பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

CBI Arrests 5 for Posting Defamatory Content Against Judges

இந்த வழக்கில் எஃப்ஐஆரில் மொத்தம் 16 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களின் ஐபி முகவரியை வைத்து 13 பேரின் இருப்பிடங்களை சிபிஐ கண்டறிந்தது. அதில் மூன்று பேர் வெளிநாட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுவரை இந்த வழக்கில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜூலை 28ஆம் தேதி தமி ரெட்டி கொண்டா ரெட்டி மற்றும் பமுலா சுதீர் ஆகியோரை கைது சிபிஐ கைது செய்தது

அதேபோல குவைத்தில் இருந்த நாடு திரும்பிய லிங்கரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவரையும் கடந்த ஜூலை 9ஆம் தேதி சிபிஐ கைது செய்தனர். இந்த வழக்கில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்பிகளும் தொடர்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் எஃப்ஐஆரில் இடம் பெறாத சிலர் குறித்து விசாரித்து வருவதாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக ஜார்கண்ட் நீதிபதி கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கு விசாரணையில், கீழமை நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் புலனாய்வு அமைப்புகள் சரியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில்தான் தற்போது சிபிஐ தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+