அடேங்கப்பா! ரூ.20 லட்சம் கொடுத்தால் பாஸ்.. அதிரவைத்த நீட் தேர்வு மோசடி - கொத்தாக தூக்கிய சிபிஐ
டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் வெற்று பெறுவதற்கு ரூ.20 லட்சம் வசூல் செய்யப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.
மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.
இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

நீட் தேர்வு விலக்கு மசோதா
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

நீட் தேர்வு
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட நீட் தேர்வு தொடர்பாக பலவிதமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 497 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 18,72,339 மாணவர்கள் தேர்வை எழுதினார்கள்.

ஆள்மாறாட்ட மோசடி
இது ஒருபுறமிருக்க நீட் ஆள்மாறாட்டம் மோசடிகளில் ஈடுபட்டதாக டெல்லியில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிபிஐ நடத்திய தீவிர விசாரணையில் அதிர வைக்கும் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி இருக்கின்றன. நீட் தேர்வில் தேர்ச்சியடைய விரும்பும் மாணவர்களின் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற வைப்பதற்காக மோசடி கும்பல் ரூ.20 லட்சம் பெற்றது தெரிய வந்திருக்கிறது.
Recommended Video

4 மாநிலங்கள்
இதில் ரூ.5 லட்சம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதும் நபருக்கு வழங்கப்படும் என்றும் மீதம் உள்ள 15 லட்சம் ரூபாய் இடைத்தரகர்கள் மற்றும் ஆள்மாறாட்டத்துக்கு உதவியாக இருந்தவர்களுக்கு பிரித்து வழங்கப்படுவதும் உறுதியானது. இதில் டெல்லியை சேர்ந்த சுஷில் ரஞ்சன் என்பவரே இதில் மூளையாக செயல்பட்டதும், பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் நீட் மோசடிகளில் ஈடுபட்டதும் தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications