போர் நிறுத்தம்.. அப்பட்டமாக மீறிய பாகிஸ்தான்! ஜம்முவில் பிஎஸ்எஃப் வீரர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆனால், போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்ட 3 மணி நேரத்தில் மீண்டும் பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பிஎஸ்எஃப் ஜம்மு எனும் x தளத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. அதில், "ஜம்மு-காஷ்மீர், ஆர்எஸ் புரா எல்லைப்பகுதியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் என இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடத்தது. இதில் உயிரிழந்த பிஎஸ்எஃப் சப் இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு நாங்கள் முழு மரியாதை செலுத்துகிறோம்.

pakistan india Pakistan

அவர் தனது படையை முன்னிற்று வழி நடத்தி சென்றபோது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார். இவர் தனது இறுதி மூச்சுவரை தனது கடமையை சரியாக செய்திருக்கிறார். எல்லை பாதுகாப்புப்படையின் டைரக்டர் ஜெனரல் மற்றும் அனைத்து ரேங்க் படைவீரர்களும் இவரது குடும்பத்தினருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

முகமது இம்தியாஸ் உடலுக்கு பிரண்டியர் ஹெட்குவார்ட்டர் ஜம்மு, பலௌராவில் முழு இராணுவ மரியாதை செலுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+