மோடி அரசால் மற்றொரு தன்னாட்சி அமைப்பு சீர்குலைப்பு... ப. சிதம்பரம் ட்வீட்
டெல்லி: மோடி அரசால் மற்றொரு தன்னாட்சி அமைப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையமே சாட்சி என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
7 வது மற்றும் கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை பிடிப்பது யார் என்று மே 23ஆம் தேதி தெரிந்துவிடும்.

இந்தநிலையில், கருத்து வேறுபாடு இயல்பானது, அனைவரும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது என்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசாவின் கடித விவகாரம் மற்றும் கருத்து வேறுபாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, என்று விளக்கமளித்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப. சிதம்பரம், சில விஷயங்களை மக்களிடம் வெளிப்படையாக சொல்ல முடியாது என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் என்றும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை வாக்காளர்கள் கண்டுகொள்ளக்கூடாது என்கிறாரா ஆணையர்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
There is no need for any more proof that another independent institution has been captured by the Modi sarkar.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 18, 2019
மேலும், அமைதி மிக்க தெளிவானவர் என்பது தலைமை தேர்தல் ஆணையர் விளக்கத்தில் இருந்து தெரிகிறது. அதே நேரம், புகார் மற்றும் பதிலுக்கும் இடையேயான தொடர்பை நான் இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி, அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து ட்வீட்டரில் விமர்சனம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது என்ற கூற்றின் சாட்சி பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு என்றும் அவரின் அமைதி ஒரு செய்தியை சொல்வதாகவும் கூறினார். மேலும், தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாதகமானால் அமித்ஷாவை காரணம் காட்டவே மோடி செய்தியாளர்களை சந்தித்தார் என்றும் குறிப்பிட்டார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications