மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 2% அகவிலைப்படி உயர்வு.. கைக்கு வரும் சம்பளம் எவ்வளவு உயரும்?
டெல்லி: நீண்ட நாட்களாகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.. பொதுவாக ஆண்டின் முதல் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு மார்ச் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாதிக்கு மேல் ஆகியும் அறிவிப்பு வெளியாகாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்தச் சூழலில் தான் இன்று (ஏப்ரல் 18) கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2% அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 2% உயர்த்தப்படும் போது, உங்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 2% சம்பளம் உயரும்!













Click it and Unblock the Notifications