ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்து அதனை தடை செய்துள்ளது. உலக நாடுகள் பல இந்த ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அறிவித்து அதனை தடை செய்துள்ளது.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என 10 பேரை கைது செய்திருந்தனர். தமிழகத்தின் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஹமீர் முசீன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான், அவரது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் செரீன், அகமது அலி, மைசூர் ரகுமான், தஞ்சையை சேர்ந்த முஷ்பூர் ரகுமான், அல்தாப் தாஹிப் மற்றும் பெங்களூர் விமான நிலையத்தில் அஜய் அகமது ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் தேசிய புலானய்வு முகமை அதிகாரிகள் போலீஸ் கஸ்டடியில் வைத்து ஐந்து ஐந்து நாட்களாக இருமுறை விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பில் இருந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டனர் என்றும் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியை நாடியிருப்பதும் தெரியவந்தது.
மேலும் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்புடனும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆவணங்களில் உலகத்தில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பில் இருந்ததும், பாகிஸ்தானில் இருக்கும் சிலடரிடம் உதவி கேட்டதும், அதாவது காஷ்மீரை பாகிஸ்தானுடன் சேர்க்கும் படி உதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பினை மத்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதனை பிரகனடப்படுத்தி உள்ளது. தற்போது இது தொடர்பான அறிக்கையினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications