Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒர்க் ஃப்ரம் ஹோம் இனி இல்லை.. ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு,, இனி 100% பணியாளர்களுடன் அலுவலகங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்கும் என மத்திய பணியாளர்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் திடீரென உயர்ந்தது. கொரோனா மூன்றாவது அறை தொடங்கிய சமயத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து ஜனவரி 3ஆம் தேதி மத்திய அரசு அனைத்து துறைகளிலும் துணைச் செயலாளர் நிலைக்குக் கீழே உள்ள அனைத்து ஊழியர்களின் வருகையை 50 சதவீதமாக குறைத்ததோடு பிப்ரவரி 15ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு இருக்கும் என அறிவித்தது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தற்போது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு கூட்டம் நடத்தினார். வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் உடனும் சோதனை செய்து கொண்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி 100% பணியாளர்களுடன் அலுவலகங்களை திறப்பதாக மத்திய பணியாளர் கள் பொதுமக்கள் குறை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி வரை 50 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை தொற்றுநோய் நிலைமையை மறுஆய்வு செய்ததாக டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.

100% பணியாளர்கள்

100% பணியாளர்கள்

மேலும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையில் குறைவு மற்றும் நேர்மறை விகிதத்தில் சரிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முழு அலுவலக வருகை நாளை முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மட்டங்களிலும் உள்ள பணியாளர்கள், எந்தவித விலக்குமின்றி, பிப்ரவரி 7 முதல் அமலுக்கு வரும் வகையில் வழக்கமான அடிப்படையில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முகக்கவசம் கட்டாயம்

முகக்கவசம் கட்டாயம்

மேலும், துறைகளின் தலைவர்கள் தங்கள் ஊழியர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருந்து உள்ளீடுகளைப் பெற்று, நிலைமையை மதிப்பாய்வு செய்த பிறகு, பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை மூலம் ஒரு புதிய அறிவுப்பு வெளியிடப்படுகிறது, இது அனைத்து மட்டங்களிலும் உள்ள அனைத்து ஊழியர்களும், எந்த விலக்குமின்றி பணிக்கு செல்லலாம் என மத்திய பணியாளர்கள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+