Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா வரும் 114 ரபேல் விமானங்கள்.. பெரிய தடையை தாண்டியது.. இனி பாகிஸ்தானால் வாலாட்டவே முடியாது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு கொள்முதல்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு மிக முக்கிய ஒப்பந்தத்தைக் கொடுத்துள்ளது. ரூ.3.25 லட்சம் கோடி செலவில் 114 ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.

இந்தியப் பாதுகாப்புப் படையைப் பலப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கும் பணிகள் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், தேவையான ஆயுதங்கள், விமானங்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய விமானப் படைக்கு 114 ரஃபேல் போர் விமானங்களை ₹3.25 லட்சம் கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

Central govt approves Rs 3 25 lakh crore to procure 114 Rafale fighter jets for the Indian Air Force

ரபேல் விமானங்கள்

நாட்டின் பாதுகாப்புத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இதுவாகும். ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இத்திட்டத்திற்குத் தேவைக்கான ஒப்புதலை வழங்கியது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் விரைவில் இந்தியாவுக்கு வரும் நிலையில், அதற்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேக்ரான் இந்தியா வரும்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

ஒப்பந்தம் என்ன!

மத்திய அரசின் முடிவின்படி 114 ரஃபேல் விமானங்கள் பிரான்சிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். அதில், 18 விமானங்கள் டஸ்ஸால்ட் ஏவியேஷனிடமிருந்து நேரடியாகவும், மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவும் உள்ளன. மேலும், மேம்பட்ட ரபேல் போர் விமானத் தொழில்நுட்பப் பரிமாற்றத்தையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கும் இது ஊக்கமளிப்பதாக அமையும். அடுத்த கட்டமாக இந்த ஒப்பந்தம் இப்போது பிரதமரின் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவுக்குச் செல்லும். அங்கு இறுதி அனுமதி அவசியம்.

ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், ஆயுதப் படைகளுக்கான பல திட்டங்களுக்குச் சுமார் ₹3.60 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்குத் தேவைக்கான ஒப்புதலை அளித்தது. அதில் முக்கியமானது விமானப் படைக்கு ரஃபேல் வாங்கும் இந்த ஒப்பந்தம். இது தவிர AS-HAPS உள்ளிட்ட திட்டங்களுக்கும் தேவையான ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஏன் தேவை

இந்திய விமானப் படைக்கு ரபேல் வருகை மிகப் பெரிய சாதகமாக அமையும். விமானப்படையின் வான் ஆதிக்கத் திறனை அதிகரிக்கவும் எந்த மோதலிலும் ஆதிக்கம் செலுத்த உதவும். மேலும், பெரும்பாலான விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்பதால் இந்தியாவில் வேலைவாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கும்.

ரபேல் விமானங்கள்

இப்போது உலகில் இருக்கும் அதிநவீனப் போர் விமானங்களில் ஒன்று ரபேல்.. பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) இந்த ரபேல் (Rafale) போர் விமானங்களைத் தயாரிக்கிறது. இரு என்ஜின்கள் மற்றும் டெல்டா-விங் வடிவமைப்புடன் கூடிய அதிநவீனப் பன்முகப் போர் விமானமாக ரபேல் இருக்கிறது. இது மணிக்கு 2,223 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

மேலும், இந்த ரபேல் போர் விமானங்களுக்கு அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வசதியும் இருக்கிறது. போர் சூழல்களில் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளைத் தாக்கும் Omnirole திறனையும் இது கொண்டது. ரபேல் வருகை இந்திய விமானப் படைக்கு பலத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+