ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக கடன் வாங்க முடியாது: ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசு
டெல்லி: ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக மத்திய அரசு கடன் வாங்க முடியாது: மாநில அரசுகள் தேவைப்பட்டால் வெளியில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு கையை விரித்துவிட்டது.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திங்கள்கிழமையன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மீண்டும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திலும் மாநில அரசுகள், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசோ, தம்மிடம் நிதி இல்லை- கடனும் வாங்க முடியாது; மாநில அரசுகள் கடன்வாங்க ஏற்பாடு செய்கிறோம் என கூறியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
மாநிலங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான கால அவகாசம் 50 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றன. மத்திய அரசால் தற்போதைய சூழ்நிலையில் ஏன் கடன் வாங்க இயலாது என்பது குறித்து மாநிலங்களுக்கு விளக்கம் தரப்பட்டது.

இதனை 12 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மாநிலங்கள் தேவைப்பட்டால் வெளியே கடன் வாங்கலாம். கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதிதேவைப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விரைவில் உரிய பதில் தரும்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை. உரிய காலத்தில் நிச்சயம் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை ரூ 10,774.98 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications