நாகாலாந்து மீண்டும் பதற்றப் பகுதியாக பிரகடனம்- ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு
டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் மத்திய அரசால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
நாகாலாந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்டது முதலே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தனிநாடு கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன.
நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக் மூய்வா) பிரிவினர் இந்த தனிநாடு போராட்டத்தை நடத்தினர். பின்னர் மத்திய அரசு இந்த அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

படையினருக்கு சிறப்பு அதிகாரம்
நாகா இனமக்கள் வசிக்கும் பிற மாநிலப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து நாகாலிம் எனப்படும் அகன்ற நாகாலாந்து எனும் நாடு உருவாக்க வேண்டும் என்பதே பிரிவினைவாத அமைப்புகளின் கொள்கை. இதை ஒடுக்கும் வகையில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் - AFSPA சட்டம் அமலில் இருக்கிறது.

AFSPA சட்டம்
பிரிவினைவாதம் கோரி ஆயுதப் போராட்டம் நடைபெறும் மாநிலங்களில் இந்த AFSPA சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த AFSPA சட்டம் திரும்பப் பெறப்பட்டும் உள்ளது. மேகாலயா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் AFSPA திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு
பாதுகாப்புப் படையினர் எந்தவித அனுமதியும் இல்லாமல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளவும் கைது செய்யவும் வகை செய்யும் AFSPA சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்பது குற்றச்சாட்டு. இந்த AFSPA சட்டத்தை மணிப்பூரில் வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக இரோம் சர்மிளா என்ற சமூக செயற்பாட்டாளர் 20 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தற்போது நாகாலாந்தில் AFSPA சட்டத்தை நீட்டிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

நாகாலாந்தில் 6 மாதத்துக்கு நீட்டிப்பு
இது தொடர்பான அறிவிக்கையில், ஒட்டுமொத்த நாகாலாந்து மாநிலமும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பிரகடனம் செய்யப்படுகிறது. ஆகையால் AFSPA சட்டம் வரும் மேலும் 6 மாதங்களுக்கு அதாவது டிசம்பர் 31-ந் தேதி வரை இம்மாநிலத்தில் அமலில் இருக்கும் என்று மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது வழக்கமாக மத்திய அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications